ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: ராஜ்பவனில் பலத்த பாதுகாப்பு - 1000 போலீஸார் குவிப்பு
ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதால் ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை : தொடர் போராட்டங்கள் காரணமாக ஆளுநர் மாளிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றதில் இருந்து தன்னிச்சையாக மாவட்டங்களில் ஆய்வும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தினார். இது மாநில சுயாட்சியில் தலையிடும் போக்கு என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பினர்.

ஆளுநர் ஆய்வுக்கு செல்லும் அனைத்து இடங்களிலும் அவருக்கு எதிராக போராட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்நிலையில், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் வேற்று மாநில பேராசிரியர்களை துணைவேந்தர்களாக நியமித்ததற்கும், காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு எந்த வித அழுத்தமும் தராத ஆளுநரைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டங்கள் அறிவித்தன. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் வெளியான நிலையில், அதில் ஆளுநர் பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அரசியல் கட்சிகள் சார்பில், ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டமும், பேரணியும் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களின் எதிரொலியாக தொடர் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர்கள் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications