'சின்னம்மா'வுக்கு நன்றி... ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவரின் போஸ்டரால் கொந்தளிப்பு!
சசிகலாவுக்கு நன்றி தெரிவித்து ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் ஒட்டியிருக்கும் போஸ்டர் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராடிய நிலையில் அதிமுகவினரின் 'சின்னம்மா'வுக்கு நன்றி தெரிவித்து ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் பி. ராஜசேகர் ஒட்டியிருக்கும் போஸ்டர் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என அலங்காநல்லூர் வாடிவாசலில் பற்ற வைத்த நெருப்பு தமிழ்நாடெங்கும் பரவியது. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பெருந்திரளாக மக்கள் ஒன்று திரண்டு போராடினர்.

ஒரே ஒரு நாள் போராட்டமாக இல்லாமல் பல நாள் போராட்டமாக இது வெடித்தது. பல லட்சம் பேர் சென்னை மெரினாவில் அமைதிவழி அறப்போராட்டத்தை நடத்தினர்.
இப்போராட்டத்தால் அதிர்ந்து போன சக்திகள் போலீஸை ஏவி வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. அமைதிவழி அறப்போருக்கு அரணாக நின்ற மீனவ மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் பி. ராஜசேகர் ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்ற காரணமாக இருந்த அதிமுக பொதுச்செயலர் சின்னம்மா மற்றும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தங்களை அர்ப்பணித்து போராடி ரத்தம் சிந்தி பெற்ற உரிமை இது. ஆனால் இந்த புரட்சியாளர்கள் மீது போலீஸ் மூலம் வன்முறையை ஏவிவிட்டவர்களாக குற்றம்சாட்டப்படுகிற கும்பலுக்கு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரே நன்றி சொல்வதை எப்படி சகிக்க முடியும்? என கொந்தளிக்கிறது இளைஞர் படை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications