ஜெருசலேமுக்கு பதிலடியாக கொடைக்கானலில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதி?
ஜெருசலேம் விவகாரத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் கொடைக்கானலுக்கு வருகை தரும் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல்: இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அறிவித்ததற்கு பதிலடியாக தமிழகத்தின் கொடைக்கானலுக்கு ஆண்டு தோறும் வரும் யூதர்களை இலக்கு வைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் சர்வதேச நாடுகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஐஎஸ் மிரட்டல்
மெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அரபு நாடுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் தயாராகி வருகின்றன. இதனிடையே ஜெருசலேம் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி தருவோம் என ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொடைக்கானலுக்கு மிரட்டல்
இதனையடுத்து யூதர்கள் சுற்றுலா செல்லும் சர்வதேச நகரங்களில் பலத்த பாதுகாபு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொடைக்கானலுக்கு அதிக அளவில் யூத சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

வாகன சோதனைகள்
இவர்களை இலக்கு வைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் சதி நடத்தலாம் என்கிற சந்தேகத்தில் கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானலில் தீவிரமான வாகன சோதனைகளும் நடத்தபட்டு வருகின்றன.

சிரமத்தில் சுற்றுலா பயணிகள்
போலீசாரின் தீவிர கெடுபிடியால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அண்மையில் கேரளாவில் பிடிபட்ட ஐஎஸ் ஆதரவாளர்களும் கூட கொடைக்கானலில் முகாமிடும் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications