ராம்குமார் உடலைப் பார்க்க அனுமதி மறுப்பது ஏன்? ஜான்பாண்டியன் கேள்வி
சென்னை: புழல் சிறையில் மர்மமான முறையில் இறந்த ராம்குமாரின் உடலை பார்க்க தமிழக முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிணவறையில் உள்ள ராம்குமாரை பார்க்க ஜான்பாண்டியனுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால், காவல்துறையினருக்கும், ஜான்பாண்டியனுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று மின்வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் செய்தி வெளியிட்டது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையைச் சுற்றி பதற்றமான நிலையே நிலவுகிறது.

ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அரசியல் கட்சித்தலைவர்கள் கூறி வருகின்றனர். ராம்குமாரின் உடலை பிரேதபரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் ராம்குமாரின் உடலை பார்க்க தமிழக முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிணவறையில் உள்ள ராம்குமாரை பார்க்க ஜான்பாண்டியனுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால், காவல்துறையினருக்கும், ஜான்பாண்டியனுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
செய்தியாளர்களிடம் பேசிய ஜான்பாண்டியன், ராம்குமாரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக கூறியுள்ளார். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்துள்ளார். இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். ராம்குமார் எனது சொந்த மாவட்டத்துக்காரர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் எனது சொந்தக்காரர் அல்ல.
ராம்குமாரின் உடலை பார்க்க அனுமதி மறுப்பது ஏன் என்று கேட்ட ஜான்பாண்டியன், இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. சிறைகாவலர்கள் யார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் ஜான் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications