For Daily Alerts
Just In
குமரிக்கு போங்க.. முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது!
சென்னை: சென்னையில் முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுமார் 855 பேர் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் நொச்சிக்குப்பம் வரை மீனவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
குழித்துறையில் பகல் முதல் நள்ளிரவு வரை மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, குமரி மக்களை முதல்வர் பழனிசாமி சந்திக்க வலியுறுத்தி, சட்டக் கல்லூரி மாணவி நந்தினி சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.
English summary
Law collage student Nandhini who try to do dharna infront of CM house, has been arrested.
Story first published: Friday, December 8, 2017, 11:48 [IST]