மிதமான மழையோடு பலத்த காற்று... கூடவே குளிர் - எச்சரிக்கும் வானிலை மையம்
தமிழகத்தில் இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Recommended Video

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீடும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
குளிர் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரவில்லை. இன்னமும் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை
தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் தொடக்கத்தில் மழை வெளுத்து வாங்கியது. நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தென் மாவட்டங்களில் அணைகள் நிரம்பி வழிகின்றன. தென் மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியோடு நெல் நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வெடுக்கும் மழை
கடந்த 3 வாரங்களுக்கு மேலாகவே மழை பெய்யவில்லை. வருணபகவான் ஓய்வெடுத்து வருகிறார். பருவமழைக்காலம் முடிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் ஆங்காங்கே கடந்த சில தினங்களாக மழை பெய்கிறது.

அதிகாலையில் குளிர்
பகல் நேரங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இரவிலும் அதிகாலையிலும் கடுங்குளிர் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் வங்கக் கடலில் மேற்கு திசையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
பலத்த காற்று
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஜனவரி 9,10 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

குளிர் 2 டிகிரி கூடும்
பருவமழைக்காலம் இன்னமும் முடியவில்லை. கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. இந்த சீசனுக்கு ஏற்ப இரவிலும், அதிகாலையிலும் குளிர் 3 டிகிரி அதிகரிக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications