போட்டிப்போட்டு எம்ஜிஆர் பாட்டு பாடிய திமுக அதிமுக... சட்டசபை கலகல
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சினிமா பாடலை சட்டசபையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பாடியதால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.
சென்னை: சட்டசபையில் நேற்று, எம்ஜிஆர் திரைப்பட பாடலை திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பாடியதால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு நிலவியது.
நேற்றைய சட்டசபை கூட்டத்தில், திமுக உறுப்பினர் அன்பழகன் பேசும்போது, ' எம்ஜிஆர் -பானுமதி இணைந்து நடித்த படத்தின் பாடலான, "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்" என்று பானுமதி பாடியது போலத்தானே இப்போது தமிழக விவசாயிகள் நிலைமை இருக்கிறது என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர்கள், "எம்ஜிஆர் பாடிய கடைசி இருவரிகளைப் பாடுங்கள்" என்று கோரஸாக குரல் எழுப்பினர். ஆனால் அன்பழகன் பாடவில்லை. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணு வழக்கமாக அவையில் பாடுவது போல, நேற்றும் பாட எழுந்தார்.
அதைக் கவனித்த எம்எல்ஏ அன்பழகன் " நீங்க நல்லா பாடுவீங்கன்னு தெரியும். உட்காருங்க " என்றார். அதற்கு அமைச்சர் துரைக்கண்ணு "அம்மா இல்லாத அவையில் பாடக்கூடாது என்று இருந்தேன். ஆனால் உங்களால் பாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது " என்றார்.
பின்னர் " நானே போடப்போறேன் சட்டம்... நன்மை விளையும் திட்டம் " என்று பாடினார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதன்பின்னர் அன்பழகன், " நாங்களும் எம்ஜிஆர் படத்தை சட்டைக் கிழிந்தாலும் பரவாயில்லை என்று தியேட்டரில் டிக்கெட் வாங்கி படம் பார்த்தவர்கள்தான். " என்று அமைச்சர் துரைக்கண்ணு பாடிய அதே வரிகளை மீண்டும் பாடி அமர்ந்தார்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications