14 மடங்கு பெரியது.. 30 மடங்கு அதிக வெளிச்சம்.. புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலா!
புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலாவை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
Recommended Video

சென்னை: புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலாவை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
2018ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் Super Blue Blood நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி ஒன்று மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்றும் என நாசா ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. மாதத்துக்கு ஒரு முறை வானில் தோன்றும் பவுர்ணமி என்னும் முழுநிலா எப்போதாவது ஒரு முறை பெரிய அளவில் தெரியும்.

நேற்று சூப்பர் நிலா..
பவுர்ணமி நாளில் நிலா பூமிக்கு அருகில் வரும்போது சூப்பர் நிலா என்றழைக்கப்படுகிறது. வான அறிவியல் கணக்குப்படி விண்ணில் உள்ள கோள்கள் சூரியனையும், அதன் பால்வழிப்பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

நேர்க்கோட்டில் வரும்போது
அதுபோல நிலவும் பூமியை சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வர 29.32 நாட்கள் ஆகிறது. பூமி சூரியனைச்சுற்றிவர 365.256 நாட்கள் ஆகிறது. இந்த கணக்கின்படி பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலவும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பெரிய நிலா என்று அழைக்கப்படும் சூப்பர் நிலா தோன்றுகிறது.

மேகமூட்டத்தால்..
கடந்த மாதம் 4ம் தேதி இதுபோன்ற பெரு நிலவு தோன்றியது. அப்போது வானம் மேகமூட்டமாக இருந்ததால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணமுடியாமல் போனது.

30 மடங்கு அதிக வெளிச்சம்
இந்நிலையில் 2018ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று வானில் சூப்பர் நிலா தோன்றியது. இது வழக்கத்தை 14 மடங்கு பெரியதாகவும், 30 மடங்கு அதிக வெளிச்சமாகவும் இருந்தது.

இன்றும் காணலாம்
நேற்றைய சூப்பர் நிலாவை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கோளரங்கில் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் சூப்பர் நிலாவை கண்டுகளித்தனர். இந்த சூப்பர் மூனை இன்றும் வானில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ஆம் தேதி சந்திர கிரகணம்
இந்த ஜனவரி மாதத்தில் நேற்று ஒரு பவுர்ணமியும், வரும் 31ம் தேதி ஒரு பவுர்ணமியும் வருகிறது. நேற்று சூப்பர் நிலா தோன்றிய நிலையில் வரும் 31ஆம் தேதி வரும் வரும் பவுர்ணமியின் போது சந்திரகிரகணம் ஏற்பட உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications