14 மடங்கு பெரியது.. 30 மடங்கு அதிக வெளிச்சம்.. புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலா!
புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலாவை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
Recommended Video

சென்னை: புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலாவை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
2018ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் Super Blue Blood நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி ஒன்று மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்றும் என நாசா ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. மாதத்துக்கு ஒரு முறை வானில் தோன்றும் பவுர்ணமி என்னும் முழுநிலா எப்போதாவது ஒரு முறை பெரிய அளவில் தெரியும்.

நேற்று சூப்பர் நிலா..
பவுர்ணமி நாளில் நிலா பூமிக்கு அருகில் வரும்போது சூப்பர் நிலா என்றழைக்கப்படுகிறது. வான அறிவியல் கணக்குப்படி விண்ணில் உள்ள கோள்கள் சூரியனையும், அதன் பால்வழிப்பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

நேர்க்கோட்டில் வரும்போது
அதுபோல நிலவும் பூமியை சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வர 29.32 நாட்கள் ஆகிறது. பூமி சூரியனைச்சுற்றிவர 365.256 நாட்கள் ஆகிறது. இந்த கணக்கின்படி பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலவும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பெரிய நிலா என்று அழைக்கப்படும் சூப்பர் நிலா தோன்றுகிறது.

மேகமூட்டத்தால்..
கடந்த மாதம் 4ம் தேதி இதுபோன்ற பெரு நிலவு தோன்றியது. அப்போது வானம் மேகமூட்டமாக இருந்ததால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணமுடியாமல் போனது.

30 மடங்கு அதிக வெளிச்சம்
இந்நிலையில் 2018ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று வானில் சூப்பர் நிலா தோன்றியது. இது வழக்கத்தை 14 மடங்கு பெரியதாகவும், 30 மடங்கு அதிக வெளிச்சமாகவும் இருந்தது.

இன்றும் காணலாம்
நேற்றைய சூப்பர் நிலாவை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கோளரங்கில் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் சூப்பர் நிலாவை கண்டுகளித்தனர். இந்த சூப்பர் மூனை இன்றும் வானில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ஆம் தேதி சந்திர கிரகணம்
இந்த ஜனவரி மாதத்தில் நேற்று ஒரு பவுர்ணமியும், வரும் 31ம் தேதி ஒரு பவுர்ணமியும் வருகிறது. நேற்று சூப்பர் நிலா தோன்றிய நிலையில் வரும் 31ஆம் தேதி வரும் வரும் பவுர்ணமியின் போது சந்திரகிரகணம் ஏற்பட உள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications