ஜெயங்கொண்டத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ஆண்குழந்தை... பிறந்த 15 நிமிடத்தில் வீசிச் சென்ற பெண்!
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 நிமிடங்களில் ஆண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 நிமிடங்களில் ஆண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணையில் கழிவு பொருட்களை போடுவதற்காக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துமனையில் உள்ள பாத்ரூம் அருகே இருந்த குப்பை தொட்டி அருகே பிறந்து 15 நிமிடங்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் கிடந்துள்ளது.

குழந்தையின் அழுகுரல் கேட்ட அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர் ஜெயங்கொண்டம் போலிசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
மருத்துவமனை வளாகத்திலேயே குப்பை தொட்டியில் ஆண் சிசு உயிருடன் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைக்கு வெளியே பிரசவித்த பின்னர் குழந்தையை பெண் குப்பைத் தொட்டியில் வீசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரித்து வருகின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications