இன்னும் 2 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து… சுகாதாரத் துறை அறிவிப்பு..

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கிடைத்ததை உறுதி செய்யும் வகையில், சுகாதாரத்துறை இன்றும், நாளையும் வீடு வீடாக ஆய்வு நடத்தி விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்க திட்டமிட்டுள்ளது.
போலியோ பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், இந்த ஆண்டுக்கான இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. பஸ், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், சுகாதார மையங்கள் என, தமிழகம் முழுவதும் அமைக்கப் பட்டன.
சுகாதார ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொதுமக்கள் ஆர்வமுடன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். சுங்கச்சாவடி வழியாகச் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி "தமிழகத்தில், 70.32 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்க திட்டமிடப்பட்டு 67.5 லட்சம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து சரியாகக் கிடைத்துள்ளதா என அறியும் வகையில் ஊழியர்கள் இன்றும், நாளையும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவர்.
விடுபட்ட குழந்தைகளுக்கு அப்போது சொட்டு மருந்து கொடுக்கப்படும். இது தவிர பஸ், ரயில் நிலையங்களில் இரண்டு நாட்கள் சொட்டு மருந்து கொடுக்கப்படும். சொட்டு மருந்து கிடைக்காவிட்டால் "104' என்ற மருத்துவச் சேவைக்கு புகார் செய்யலாம்"இவ்வாறு அவர் கூறினார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications