ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு- குட்டி கதை மூலம் விளக்கிய ரஜினி
ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு என்று சென்னையில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகத்துக்கு வெளிநாட்டை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டம் வழங்கியது. இதை முன்னிட்டு அவருக்கு தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் ஏ.சி. சண்முகத்தின் நண்பர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஏழைகள்
அப்போது விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் என்னதான் உழைப்பு, விடாமுயற்சி, அதிர்ஷ்டம் என இருந்தாலும் கடவுள் அருள் இருந்தால் மட்டுமே யாரும் முன்னேற முடியும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் சேவை.

சுத்தமாக இருக்க வேண்டும்
ஆண்டவன் அருள் மட்டும் இருந்தால் போதாது. நமக்கு நல்ல எண்ணம் வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். மனம் போன போக்கில் போகக் கூடாது. நம் உடலை சுத்தமாக வைத்து கொண்டால், மனமும் சுத்தமாக இருக்கும் என்றார்.

போகும் வழியில்
இதனை ஒரு குட்டி கதை மூலம் ரஜினி விளக்கினார். அவர் கூறுகையில் பரமஹம்சர் ஒரு நாள் காசிக்கு செல்ல நினைத்தார். அதற்காக தான் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து கொண்டு காசிக்கு புறப்பட்டார். போகும் வழியில் சில ஏழைகளை கண்டறிந்தார்.

உதவி செய்வது இறை தொண்டு
அப்போது அவர்களுக்கு அந்த பணத்தை செலவு செய்தார். அதன் வழியாக அவர்கள் முகத்தில் இறைவனை கண்டு காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டாக கூறினார். எனவே ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications