குவியல் குவியலாக சிக்கிய குண்டுகள்... கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு
கூடங்குளம்: கூடங்குளம் அருகே கடற்கரை கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு குவியல்கள் போலீசாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதனால் கூடங்குளத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தன்குழியில் இரு பிரிவு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் நடப்பது வாடிக்கை. அப்போது இரு பிரிவு மீனவர்களும் ஓருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவர். இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு திருமண் வீட்டில் நடந்த தகராறு தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக எஸ்பி விக்ரமன் தலைமையிலான போலீசார் விரைந்து அங்கு விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் வாகனம் மீதும் நாட்டு வெடிகுண்டுகள் வீசபபட்டது. இதையடுத்து வெகுண்ட போலீசார் கிராமம் முழுவதும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களிடம் சிக்காமல் இருக்க படகுகளில் ஏறி கடலுக்குள் தப்பி சென்றனர். அவர்கள் இதுவரை ஊர் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கடற்கரையில் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியதில் கடற்கரை மணலில் புதைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் பல பிடிப்பட்டன.
இந்த சண்டை தற்காலிகமா்க ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் மிகப்பெரிய தாக்குதல் நடக்கலாம் என ரகசிய தகவல் எஸ்பிக்கு கிடைத்தது. இதையடுத்து மீண்டும் களத்தில் குதித்த போலீசார் கடற்கரையில் சந்தேகப்படும் இடங்களில் எ்ல்லாம் தோண்டி பார்க்க ஆரம்பித்தனர். அப்போது கடற்கரை மணலிலும் உடை மரஙகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் குவியல் குவியலாக சிக்கியதால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கூடங்குளத்தில் அணு மின் நிலையம் செயல்பட்டு வருவதால் போலீசார் உஷார்படுத்ப்பட்டுள்ளனர். கூத்தன்குழியில் வெடிகுணிடுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது இது 13வது முறையாகும். ஜாங்கிட் எஸ்பியாக இருந்த காலகட்டத்தில் நாட்டு வெடிக் குண்டுக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிர முயற்சி எடுத்தார். ஒரு முறை அவர் சோதனை நடத்தியதில் 1000 நாட்டு வெடிகுண்டுகள் வரை குவியல் குவியலாக கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி இப்பகுதியில் வெடிகுண்டுகள் புழங்கி வருவதால், இதைத் தயாரிக்க இவர்களுக்கு மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது, இது குறித்து போலீசார் ஏன் விரிவான விசாரணை நடத்தவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இ்ங்கு அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடப்பதும், நூற்றுக்கணக்கில் வெடிகுண்டுகள் சிக்குவதும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூடங்குளம் அணு மின் நிலைய வாளக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications