அனுமதியின்றி ட்ரெக்கிங் செல்வதை வனத்துறையில் சோதனை செய்ய ஆட்கள் இல்லையா? சீமான் கேள்வி
அனுமதியின்றி ட்ரெக்கிங் செல்வதை சோதனை செய்ய வனத்துறையில் ஆட்கள் இல்லையா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: அனுமதியின்றி ட்ரெக்கிங் செல்வதை சோதனை செய்ய வனத்துறையில் ஆட்கள் இல்லையா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ட்ரெக்கிங் சென்ற 10 பேர் காட்டுத் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 6க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களில் 8 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீமான் கேள்வி
இந்நிலையில் குரங்கணி தீ விபத்து குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மலையேற்றத்திற்கு அனுமதியின்றி சென்றார்கள் என்றால் வனத்துறையில் சோதனை செய்ய ஆட்கள் இல்லையா? என அவர் கேள்வி எழுப்பினார்.

நியூட்ரினோ திட்டம்
குரங்கணி தீ விபத்தால் வனப்பகுதிக்குள் யாரையும் செல்ல விடாமல் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவார்கள் என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.

பொறுப்பற்ற பதில்
இயற்கையாக தீப்பற்றினால் அணைப்பதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லையா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். மலையேற்றத்திற்காக சென்றவர்கள் அனுமதியின்றி அரசு கூறுவது பொறுப்பற்ற பதில் என்றும் சீமான் தெரிவித்தார்.

ரஜினி வரமாட்டார்
பேரிடர் காலங்களில் தற்காப்புக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் ரஜினி குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், ரஜினி கருத்து கூறாமல் நழுவியும் போவார், போராடவும் வரமாட்டார், அறிக்கையும் விடமாட்டார் என்று விமர்சித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications