அப்துல் கலாம் நினைவு நாள் போட்டிகள்... சிவகங்கை பள்ளி மாணவர்களுக்குப் பரிசு : வீடியோ
அப்துல் கலாம் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சிவகங்கை அரண்மணை சார்பில் போட்டி நடத்தப்பட்டு மன்னர் துரை மகேஷ் பரிசுகள் வழங்கினார்.
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிவகங்கை மன்னர் மகேஷ் துரை பரிசுகள் வழங்கினார்.
முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. 15 கோடி ரூபாயில் ராமேஸ்வரம் பேக்கரும்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நேற்று அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல பள்ளிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகங்கையில் மன்னர் குடும்பத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மன்னர் மகேஷ் துரை பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications