சட்டசபையை கூட்டி தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டமன்றத் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தை வறட்சி மாநில அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேண்டும் என்றும் திமுக பொருளாலர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு அதிமுக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
உழவர்கள் நாளான இன்று தமிழகத்தில் விவசாயிகளின் நிலை வேதனைக்குரியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜட் கூட்டத்தொடர் செப்டம்பர் 2ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கூட்டப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இதுவரை கூட்டத்தொடர் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.