நீர் பேரத்தில் கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டனர் தமிழக ஆட்சியாளர்கள்.. கமல் விளாசல்
நீர் பேரத்தில் கெஞ்சும் தமிழக அரசு கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.
திருச்சி: நீர் பேரத்தில் கெஞ்சும் தமிழக அரசு கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.
திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன் காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை வறுத்தெடுத்தார்.
உண்ணாவிரதங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஆளுங்கட்சியினர் கடைபிடித்த உண்ணாவிரதத்தை தாக்கிப் பேசினார். வெள்ளையர் காலம் போல பகிஷ்காரங்களை செய்ய வேண்டியது இல்லை என்றும் கமல்ஹாசன் கூறினார்.
தீர்வை நோக்கி செல்கிறது
மத்தியில் இருப்பதும் நாம் வைத்த மத்திய அரசு என்ற அவர், காவிரி பிரச்சனையில் மக்கள் நீதி மய்யம் தீர்வை நோக்கி செல்கிறது என்றார். நியாயம் கிடைக்க தாமதமானால் விவசாயம் என்னவாகும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டனர்
இருக்கும் நீர்வளத்தை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? என்றும் நடிகர் கமல் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழக அரசின் கையில் இதற்கான தீர்வு இருக்கிறது என்ற அவர், நீர் பேரத்தில் கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டனர் என்ற அவர் கெஞ்சும் நிலைக்கு தள்ளியது மத்திய அரசின் முதுகுக்கு பின்னாள் ஒளிந்திருக்கும் தமிழக அரசு என்றும் குற்றம்சாட்டினார்.
நல்லவர்களுடன் சேருவோம்
வல்லுநர்கள் சொல்லும் கருத்தை கேட்டு செய்யுங்க? அல்லது தள்ளி நில்லுங்க என்றும் கடுமையாக சாடினார் கமல். மய்யமாக இருந்தாலும் சேர வேண்டிய நேரத்தில் நல்லவர்களுடன் சேருவோம் என்றும் கமல் சூசகமாக தெரிவித்தார்.
நாம் ஏன் இருக்கக்கூடாது
உலகம் முழுவதும் சென்டரிசம் என்பது நடந்து கொண்டிருக்கிறது என்றும் உலகின் பல நாடுகளில் சென்டரிசம் பரவி வருகிறது என்றும் கூறினார். ஆசியாவின் சென்டரிசத்தின் முன்னோடியாக ஏன் நாம் இருக்கக் கூடாது?என்றும் கமல் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.