ஆகஸ்ட் மாதத்தை ஆக்கிரமித்த “சூப்பர் மூன்” மற்றும் “விண்கல் பொழிவு” – இயற்கை சீற்றங்கள் எச்சரிக்கை!
சென்னை: விண்வெளியில் ஏற்படும் அதிசய நிகழ்வுகளான "சூப்பர் மூன்" மற்றும் விண்கல் பொழிவானது இவ்வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
விண்வெளி பற்றிய ஆராய்ச்சிகள் கலிலியோ காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.
ஆனால் இன்று வரை இதற்கான முடிவுகள் எட்டபடவில்லை.

கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சி:
விண்வெளி மண்டலம் மனிதனால் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு பெரியதாக உள்ளதால் அறியும் ஆர்வமும் விரிந்து கொண்டே போகிறது. மனிதனுக்கு எட்டக் கூடிய நிலையில் உள்ள கிரகங்கள் பற்றிய ஆராய்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.

இயற்கை ரகசியம்:
இந்த உலகம் இயங்கி வரும் இயற்கை ரகசியத்தை இன்று வரை மனிதனால் அறிந்து கொள்ளமுடியவில்லை. இதற்கான தீர்வுகள் கிடைக்குமா என்பதும் இன்னும் கேள்விகுறியாகவே உள்ளது.

விடை தெரியா கேள்விகள்:
அதுபோல தான் சந்திரன் என்ற துணைக்கோள் எதற்காக பூமியை சுற்றி இயங்க வேண்டும். அதில் தண்ணீர் இருக்கிறதா, மனிதன் வாழ முடியுமா என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

பூமியை நெருங்கும் நிகழ்வு:
இப்படி ஒரு நிலையில் "சூப்பர் மூன்" என்ற நிகழ்வு வானில் ஏற்பட்டுள்ளது. இது பற்றி நிறைய தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் மூன் என்பது சந்திரன் பூமியை மிக நெருக்கமாக நெருங்கி வரும் நிகழ்வு ஆகும்.

பெரிய நிலவு:
சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும். இந்த நிகழ்வுக்கு சூப்பர்மூன் என்று பெயர். இந்த நிகழ்வு ஆகஸ்டு 10 அன்று விண்ணில் நடந்தது. பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்று பெரியதாக நிலவு காட்சி தரும்.

எரிமலை வெடிப்பு ஜாக்கிரதை:
இப்படி நிலவு பூமியை நெருங்கி வரும் சமயங்களில் நிலநடுக்க அபாயங்களும், உயிர்களை கொல்ல கூடிய நோய்கள், எரிமலை வெடிப்பு, கடல் சீற்றங்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

பூமிக்கு மிக அருகில்:
பூமியை நெருங்கும்பொழுது சந்திரன் 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 மைல்கள் தொலைவில் இருக்கும். அப்பொழுது, 16 சதவீதம் பெரியதாகவும் மற்றும் 30 சதவீதம் அதிக வெளிச்சத்துடனும் அது இருக்கும். பூமியை வழக்கத்திற்கு மாறாக 863 மைல்கள் அருகில் நிலவு நெருங்கி வரும்.

இயற்கை சீற்றங்கள்:
நிலா மிக அருகில் வருவதால் அதிக வெளிச்சம் ஏற்படும். இதன் தாக்கத்தால், பூமியில் கடல் அலைகள் அதிக உயரத்துடன் எழும்பும். பூமியின் அடுக்குகள் இடம் பெயரும். சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என விஞ்ஞான தகவல்கள் கூறுகிறது.

விண்கல் பொழிவு:
இதேபோல் மிகவும் அரிய வான்வெளி நிகழ்வான விண்கல் பொழிவையும் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications