மெரினாவில் விதிகளை மீறி ஜெ.வுக்கு நினைவு மண்டபம் கட்டப்படுமா?
சென்னை: மெரினா கடற்கரையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம், சுற்றுசூழல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
சட்டசபையில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள், பாசனத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மெரினாவில் உலகத்தரம் வாய்ந்த நினைவு மண்டபம் அமைக்கப்படும். இதற்காக, உலக அளவில் கட்டிட வல்லுநர்களிடம் வரைபடம் கேட்டுள்ளோம். அவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து நினைவு மண்டபம் கட்டப்படும். வரைபடம் வந்தவுடன் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் தொடங்கும். அதேபோல, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.
மெரினா கடற்கரையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி அளிக்க வேண்டும். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அப்பட்டமான விதிமீறல் ஆகும் என சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராம் கூறியுள்ளார்.
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி சில வகையான கட்டிடங்களின் இடிபாடு மற்றும் புனரமைப்புகளை மட்டுமே சரிசெய்ய மட்டுமே அனுமதி உள்ளது. இந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.
ஜெயலலிதா மறைந்தபோது மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ததே மாநகராட்சி விதிமீறல் ஆகும். இப்போது அதே இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது கடலோர ஒழுங்குமுறை மண்டலம் விதிகளை மீறும் செயல் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் சம்மதித்தால் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்தை தனியாக அமைக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications