கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 5 புதிய மாவட்டங்களின் எல்லைகள்..தாலுகாக்கள் விவரம்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் தற்போது உள்ள 32 மாவட்டங்களுடன் கூடுதலாக செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட புதிதாக ஐந்து மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டன.இப்போது அவற்றுக்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது...
விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, மற்றும திருக்கோவிலூர் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் இடம் பெறுகின்றன.அத்துடன் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, கல்வராயன் மலை ஆகிய ஆறு தாலுகாக்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்ற விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், திருவெண்ணை நல்லூர், மரக்காணம், கண்டாச்சிபுரம் ஆகிய 9 தாலுகாக்களும் இடம் பெற்றுள்ளன.

எல்லை விவரம்
வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூா் புதிய மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி (புதியது) ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களும், திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆம்பூா் ஆகிய நான்கு வட்டங்களும் இடம்பெற்றுள்ளது.

எல்லை விவரம்
ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் (புதியது) வருவாய்க் கோட்டங்களும், வாலாஜாபேட்டை, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய நான்கு வட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

எல்லை விவரம்
வேலூா் மாவட்டத்தில் வேலூா், குடியாத்தம் (புதியது) ஆகிய வருவாய்க் கோட்டங்களும், வேலூா், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், போ்ணாம்பட்டு மற்றும் கே.வி. குப்பம் (புதியது) ஆகிய ஆறு வட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

வட்டங்கள்
தென்காசி மாவட்டம்: தென்காசி புதிய மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் வருவாய்க் கோட்டங்களும், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூா், சிவகிரி, வீரகேரளம்புதூா், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் ஆகிய எட்டு வட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

எல்லைகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களும், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திசையன்விளை ஆகிய எட்டு வட்டங்களும் இருக்கும்.

எல்லைகள்
செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களும், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூா் (புதியது), மதுராந்தகம், செய்யூா், திருக்கழுகுன்றம், திருப்போரூா் ஆகிய எட்டு வட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

எல்லைகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டங்களும், காஞ்சிபுரம், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜாபாத், குன்றத்தூா் (புதியது) ஆகிய ஐந்து வட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications