மது விலக்காவது, ஒன்னாவது... தாலுகாவுக்கு 2 எலைட் கடைகளைத் திறக்க ரெடியாகும் டாஸ்மாக்!
சென்னை: தமிழகம் முழுவதும் தாலுகா அளவில் தலா 2 எலைட் மதுக்கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் நிறுவனம் தீவிரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழக டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது மதுக்கடைகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மது விலையேற்றம் மட்டுமே அதன் விற்பனையை குறைத்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே மது விற்பனை குறைவுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து டாஸ்மாக்கின் இலக்கை எட்டுவதற்கான சரியான வழியை காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மது விற்பனையில் பல வகைகளில் முறைகேடு நடப்பது, அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. யாரால் முறைகேடு நடக்கிறதோ அவரிடம் இருந்து அந்தத் தொகையை வசூலிப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக்கின் உயர்தர மது விற்பனை நிலையமான "எலைட்" கடைகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எலைட் கடைகள் சில இடங்களில் மட்டுமே உள்ளன. பெரிய வர்த்தக மையங்களில் மட்டுமே அவை அமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு மது வகைகள், இந்தியாவில் தயாரிக்கப்படும் உயர் ரக வகைகள் மட்டுமே இங்கு விற்கப்படும். இதை தாலுகா அளவில் கொண்டு வருவதற்கு தற்போது வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. விரைவாக இந்தக் கடைகளைத் திறப்பதற்காக, தகுந்த இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டாஸ்மாக்கிற்கு எதிரான கோஷங்கள் வலுத்து வருகின்ற நிலையில் அரசின் இந்த முடிவானது பல்வேறு தரப்புகளிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications