தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தில் மாற்றம்.. சட்டசபையில் இன்று தாக்கல்!
தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தனியார் நர்சரி பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 11 ஆயிரம் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. அந்த பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனையடுத்து தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கல்வி கட்டண கமிட்டி அமைக்கப்பட்டது. சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணி தலைமையில் கல்வி கட்டண கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தில் தமிழக அரசு மாற்றம் செய்யவுள்ளது. இதற்கான புதிய மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இதன்மூலம் 2009ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் குழு அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் புதிய சட்ட திருத்தத்தை சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications