ஜெ. அமைச்சர் பதவி தந்ததற்கு டிடிவி தினகரன் காரணமா? ஓபிஎஸ் தடலாடி பதிலடி
அமைச்சர் பதவி கிடைக்க தினகரன் காரணம் அல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை: அமைச்சர் பதவி கிடைக்க தினகரன் காரணம் என்று கூறிவருவது தவறு. எனக்கு கிடைத்த உயர் பதவிகளுக்கு நான் ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்ததே காரணம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இதுகுறித்து தனியார் தொலைகாட்சி சேனலுக்கு ஓபிஎஸ் அளித்த பேட்டியில் கூறுகையில், 1980-இல் சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா எனக்கு வாய்ப்பளித்தார். அப்போது அவர் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறி என் மேல் நம்பிக்கை வைத்தார்.
அவரது நம்பிக்கையை காப்பாற்றினேன். தொடர்ந்து அவருக்கு விசுவாசமாக இருந்தேன். அதற்கு ஜெயலலிதா அவர்கள் எனக்கு அமைச்சர் பதவியையும், இக்கட்டான சூழ்நிலைகளில் எனக்கு முதல்வர் பதவியையும் வழங்கி அழகு பார்த்தார்.

தினகரன் கூறுவது தவறு
மற்றபடி தினகரன்தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க ஜெயலலிதாவிடம் சிபாரிசு செய்தார் என்று கூறுவது தவறான தகவலாகும். அவருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார். ஆனால் தோற்றுபோனார். பின்னர் அவரை ராஜ்யசபா எம்.பி. யாக்கினார். அதன்பிறகு கடந்த 2007 முதல் அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார்.

திமுகவுடன் கூட்டணி
திமுகவை எதிர்க்கவே எம்ஜிஆர் 1972-இல் அதிமுகவை தொடங்கினார். அவரது வழியை ஜெயலலிதாவும் பின்தொடர்ந்தார். அவரது வழியை நானும் தொடருவேன். மற்றபடி சசிகலாவும், தினகரனும் சொல்வது போல் என்னை திமுக இயக்கவில்லை. எனக்கும் ஸ்டாலினுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தினகரன் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை.

பாஜகவுடன் தொடர்பா?
அதேபோல் பாஜகவுடன் எனக்கு தொடர்பிருப்பதாகவும் கூறுவது தவறு. பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா என்னிடம் சில கோரிக்கைகளை வைத்தார். ஆனால் அதற்கு நான் மறுத்துவிட்டேன். மதசார்பற்றத்தன்மையுடன் ஜெயலலிதா எவ்வாறு கட்சியை வழிநடத்தினாரோ அதே வழியில் நாங்களும் செயல்படுவோம்.

மக்கள் எங்கள் பக்கம்
1972-இல் எம்ஜிஆர் கட்சியை தொடங்கும் போது அவர் மட்டுமே எம்எல்ஏ-வாக இருந்தார்.ஆனால் தொண்டர்களும் மக்களும் அவர் பக்கம் இருந்தனர். அதை போல் மக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு நாங்கள் காரணம் அல்ல.

ஜல்லிக்கட்டு தடியடி தேவையற்றது
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தடியடி தேவையற்றது. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன் உண்மையாக ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் கலைந்து சென்றுவிட்டனர். மற்றவர்கள் போராட்டத்தை திசை திருப்ப வந்தவர்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications