பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கும் திருமாவளவன்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் அரசு பணியும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: பஸ் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் மக்கள் கொந்தளிப்பார்கள் என்றும் அரசு பணியும் என்றும் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறோம் என்றும், பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆட்சியாளர்கள் கூறுவது ஏற்புடையதல்ல.
ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் விதத்தில் பேருந்து கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியுள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்காகக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஒரு சில பேருந்துகளை வைத்திருக்கும் தனியார் கூட லாபம் ஈட்டும் போது அரசு பேருந்துக் கழகங்கள் நட்டமடைந்துவிட்டன எனக் கூறுவது அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. நிர்வாகத்தில் முறைகேடுகள் இருப்பதை ஏற்கெனவே கணக்குத் தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
போக்குவரத்து கழகத்தை அரசு நிறுவனமாக மாற்ற வேண்டும். போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் மாநிலம் முழுவதும் வெடிக்கும். மக்கள் போராட்டத்தைப் பார்த்து மாநில அரசு பணியும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். 24 ஆம் தேதியன்று மாவட்ட தலை நகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என்றும் கூறினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications