தூத்துக்குடியில் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம்: வேல்முருகன் கட்சியினர் 6 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின் கோபுரத்தில் ஏறி போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பாமக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் 6 பேர் முத்தையாபுரம் அருகே உள்ள சுந்தர்நகர் பகுதியில் இருக்கும் 70 அடி உயர மின் கோபுரத்தில் சுமார் 20 அடி உயரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதி பொது மக்கள் திகைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோபுரத்தில் இருந்து அவர்களால் கீழே இறங்க முடியவில்லை.
இதையடுத்து முத்தையாபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். கீழே இறக்கப்பட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடி அத்துமீறி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் அங்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பதட்டமாக இருந்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வேல்முருகனின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications