தூத்துக்குடியில் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம்: வேல்முருகன் கட்சியினர் 6 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின் கோபுரத்தில் ஏறி போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பாமக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் 6 பேர் முத்தையாபுரம் அருகே உள்ள சுந்தர்நகர் பகுதியில் இருக்கும் 70 அடி உயர மின் கோபுரத்தில் சுமார் 20 அடி உயரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதி பொது மக்கள் திகைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோபுரத்தில் இருந்து அவர்களால் கீழே இறங்க முடியவில்லை.
இதையடுத்து முத்தையாபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். கீழே இறக்கப்பட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடி அத்துமீறி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் அங்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பதட்டமாக இருந்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வேல்முருகனின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications