தெலுங்கு மெர்சலுக்கு வெட்டு எதுவும் இல்லாமல் தணிக்கை சான்றிதழ்!
விஜய் நடித்த மெர்சலின் தெலுங்கு பதிப்பான அதிரிந்திக்கு வெட்டு எதுவும் இல்லாமல் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: தெலுங்கு மெர்சல் படமான அதிரிந்தியில் காட்சிகள் எதுவும் நீக்கப்படாமல் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சனங்கள் இருந்தன. இதனால் தமிழில் வெளியானது முதல் பெரும் சர்ச்சையானது.

இது தேசிய அளவிலும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் மெர்சல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இப் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்க சென்சார்போர்டு வலியுறுத்தியதாகவும் இதை ஏற்று காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் அக்டோபர் 27-ந் தேதி அதிரிந்தி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
#Adirindhi #CensorCertificate #Mersal @Atlee_dir @MuraliRamasamy4 @actorvijay @arrahman #FeelingBlessed #ThalapathySwag in Telugu soon :) pic.twitter.com/wEn1uZSSI1
— Hema Rukmani (@Hemarukmani1) November 2, 2017
ஆனால் திடீரென தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என கூறி படம் வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாகி ஹேமா ருக்மணி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், அதிரிந்திக்கு தணிக்கை சான்ரிதழ் கிடைத்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். சென்னை மண்டல அதிகாரி மதியழகன் இச்சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும் தெலுங்கில் அதிரிந்தி விரைவில் வெளியாகும் எனவும் ஹேமா ருக்மணி தம்முடைய ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
-
விஜய் காபி மாதிரி.. பாஜக டீ மாதிரி.. இரண்டையும் ஒன்றாக கலக்க முடியாது.. அண்ணாமலை சொன்ன கருத்து! -
நேரில் வாங்க! கரூர் கேசில் விஜய்க்கு சிபிஐ சம்மன்! நாளை மீண்டும் விசாரணை! காட்டிக்கொடுத்த போன் கால் -
8000 கோடி சொத்து..திரிஷாவின் எக்ஸ் வருண் மணியன்! மல்டி மில்லியனனுடன் நிச்சயதார்த்தம்! பிரிந்தது ஏன்? -
விஜய்யை சங்கீதா நெருங்கவிடாமல்! குறுக்கே இருக்கும் அந்த நபர் யார் தெரியுமா? ரஞ்சனா பரபரப்பு தகவல் -
கரூர் வழக்கில் விஜய்க்கு புதிய சம்மன்.. இறுக்கும் சிபிஐ! 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி.. இன்று "ஜனநாயகன்" மறுசென்சார் இல்லை! கடைசி நேரத்தில் பிரச்சனை -
முதலில் உங்க வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மரியாதை கொடுங்க.. விஜய்க்கு குட்டு வைத்த பரிதாபங்கள் டீம்! -
விஜய் என் நண்பர்.. திரிஷாவை பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! மிரட்டல் போன்! உடைத்து பேசிய பார்த்திபன் -
மௌன விரத மாஸ்டர் விஜய்! பெண்களுக்காக பேசுவாரு, திரிஷா பற்றி வாய் திறக்க மாட்டாரு! ப்ளூ சட்டை மாறன் நேரடி அட்டாக் -
திரிஷாவால் விஜய் அரசியலுக்கு பிரச்சனை என பேசிய பார்த்திபன்! நாய் வீடியோவை வைத்து திரிஷா போட்ட போஸ்ட்! புது பஞ்சாயத்து -
கரூர் கேஸ்! விஜயுடன் சேர்த்து செந்தில் பாலாஜிக்கும் சம்மன்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை! ஷாக் மேல் ஷாக்












Click it and Unblock the Notifications