நெல்லை மாவட்டத்தில் 4 அணைகளில் இருந்து நீர் திறப்பு
தென்காசி: நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்காக 4 அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அடவி நயினார் கோவில் நீர்தேக்கம். 132 அடி உயரம் கொண்ட இந்த
நீர்த்தேக்கம் மூலம் மேக்கரை, அச்சன்புதூர், வடகரை, இலத்தூர், இடைகால், சாம்பவர்வடகரை, சுரண்டை, வீ.கே.புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 453 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது அணையில் 123 அடி நீர் உள்ளது. இந்த அணையில் இருந்து இன்று 16.11.2015.காலை 9.30 மணிக்கு நீர் திறந்து விடப்பட்டது. நீர் திறந்துவிடும் நிகழ்ச்சியில் அதிகாரிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதே போல் 72 அடி கொள்ளளவுக் கொண்ட கடையநல்லூர் கருப்பாநதி நீர்தேக்கம் நிரம்பியுள்ளது.
இந்த நீர்தேக்கத்தில் இருந்து இன்று பிசான சாகுபடிக்காக 9 ஆயிரத்து 518 ஏக்கர் விவசாய நிலங்ககள் பயன் பெரும் வண்ணம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், மாநிலங்களவை உறுப்பினர் முத்துகருப்பன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு நெல்லை மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி, கடனா நதி, அடவி நயினார், ராமநதி ஆகிய 4 நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 32 ஆயிரத்து 24 ஏக்கர் நிலங்களில் பிசான சாகுபடிக்காக இந்த அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 1.03.2016 வரை தண்ணீர் திறந்து விடப்படும்.
மழையின் மாற்றத்தைப் பொருத்து தண்ணீர் விநியோகம் மாற்றியமைக்கப்படும் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications