தவிக்க விட்டு எங்கே போனாய் என் கணவா.. கொட்டும் மழையில் மனைவி போராட்டம்!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு என்ற பகுதியில் தன்னை தவிக்க விட்டு போய் விட்ட கணவரை மீட்டுத் தரக் கோரி ஒரு பெண் கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இதுபோன்ற போராட்டங்கள் சர்வ சாதாரணம். ஆனால் இதுபோன்ற போராட்டங்கள் தொடர் கதையாகி வருவதுதான் வேதனையாக உள்ளது.
திருமணம் என்ற பந்தத்திற்கு என்னதான் அர்த்தம் என்ற கேள்வியும் எழுகிறது. பெரும்பாலும் இளம் மனைவிகளே இதுபோன்ற துயரங்களுக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாதிக்கப்பட்ட பெண்தான் இந்த சகாய டென்சி.
நாகர்கோவில் பொண்ணு
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ரதீஷ். இவருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த சகாய டென்சி என்ற பெண்ணுக்கும் மிஸ்டு கால் மூலம் காதல் ஏற்பட்டது.
மிஸ்டு கால் மூலம் காதல்
தொடர்ந்து பேசிப் பேசி காதல் வளர்த்த இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக போனது வாழ்க்கை. மோகம் முப்பது ஆசை றுபது என்பது போல போகப் போக வாழ்க்கை கசந்தது. சண்டை ஏற்பட்டது. அடிக்கடி மோதல் ஏற்பட்டு 3 முறை காவல் நிலையம் வரை போய் சமாதானம் பேசி சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
கருத்து வேறுபாடு
கடைசியாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் வாடகை வீட்டில் குடியேறிய இத்தம்பதிக்கு இடையே மீண்டும் எழுந்த பிரச்னையால் கடந்த ஒரு மாதம் முன்பு மனைவியை தனியாக தவிக்க விட்டு ரதீஷ் வெளியூர் போய் விட்டார். நிராதரவாக விடப்பட்ட டென்சி, கையில் காசின்றி சாப்பிட உணவின்றி தவித்தார்.
கைவிட்டுச் சென்ற கணவர்
கணவனை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியாத நிலையில், இன்று கொட்டும் மழையில் மாமனார் - மாமியார் வசிக்கும் வீட்டு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் குதித்தார். எனது கணவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கவில்லை என்றால் எத்தனை நாட்கள் ஆனாலும் இங்கிருந்து நகரமாட்டேன் என கூறி மழையில் குடை பிடித்தபடி வீட்டு அமர்ந்துள்ளார். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.