Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜபக்சே நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு வரும்! அதிமுகவில் இருந்து விரட்டப்படுவார் -டிடிவி தினகரன்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: இலங்கையில் இருந்து ராஜபக்சே குடும்பம் எப்படி ஓடினார்களோ, அதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் வரும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

Recommended Video

    ‘சசிகலாவுக்கு துரோகம் செய்த எடப்பாடி பிளேட்டை திருப்பிப் போட்ட வைத்தியலிங்கம்

    அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் என் பக்கம் என்ற வசனம் அண்மைக் காலமாக மீண்டும் கேட்க தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின், இந்த வசனம் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், மீண்டும் ஒன்றரை கோடி தொண்டர்கள் வசனம் பேசப்பட்டு வருகிறது. இந்தத் தொண்டர்களுக்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டிடிவி தினகரன் பேச்சு

    டிடிவி தினகரன் பேச்சு

    இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து டிடிவி தினகரன் கூறுகையில், வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. அதிலும் குறிப்பாக அரசியலில் ஜனநாயக நாட்டில் தமிழ்நாட்டின் ராஜபக்சே மாதிரி செயல்படக்கூடியவர்கள் வீழ்ச்சியைத் தான் சந்திப்பார்கள். ஜாதி, மத பேதமில்லாத அதிமுக-வில் ஜாதி, மத அரசியல் செய்து எல்லோரையும் தன் வசப்படுத்தும் அளவிற்குப் போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி.

     அதிமுகவின் வீழ்ச்சி

    அதிமுகவின் வீழ்ச்சி

    பிரமாண்டமாக படம் எடுப்பதைப் போல, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக செலவு செய்து பொதுக்குழுவைக் கூட்டி தன்னை பொதுச் செயலாளராக தானே அறிவித்துக் கொண்டுள்ளார் . அதிமுக இன்று வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தீயவர்களோடு பயணிக்கக்கூடாது என்பதற்காவும், அம்மாவின் கொள்கைகளை, லட்சியங்களை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்றும் அமமுகவை உருவாக்கியுள்ளோம்.

     இபிஎஸ்-க்கு கண்டனம்

    இபிஎஸ்-க்கு கண்டனம்

    ஜனநாயக முறைப்படி நாங்கள் வெற்றி பெற்று உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைப்போம். எடப்பாடி பழனிசாமி எப்படி பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசப்படுத்தினார் என்பதை வைத்திலிங்கம் சொல்லியிருக்கிறார். அந்த பொதுக்குழு உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் வசப்படுத்தி விடலாம். எனக்கு எடப்பாடி பழனிசாமி மீது எதிர்ப்பு உணர்வு கூட கிடையாது. அவர்களுடைய செய்கையை கண்டிக்கிறோம் அவ்வளவு தான்.

    ராஜபக்சே நிலை வரும்

    ராஜபக்சே நிலை வரும்

    எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தமிழ்நாட்டின் ராஜபக்சே மாதிரி உருவாகியிருக்கிறார். ராஜபக்சே குடும்பம் எப்படி இலங்கையை விட்டு ஓடினார்களோ, அதேநிலை எடப்பாடி பழனிசாமிக்கு வரும். இன்றைக்கு யாரையெல்லாம் தன்வசப்படுத்தி எடப்பாடி பழனிசாமி இந்த நிலையை அடைந்தாரோ, அவர்களாலேயே அம்மாவுடைய இயக்கத்தை விட்டு அவர் விரட்டப்படும் காலம் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+