Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சாரிங்க.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு”.. 51 ஆண்டுக்கு பின் புத்தகத்தை திருப்பி தந்த நபர்!

நூலகத்தில் எடுக்கப்பட்ட புத்தகம் 51 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிக் கொடுக்கப்பட்ட சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

வான்கூவர்: நூலகத்தில் எடுத்த புத்தகத்தை 51 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் திருப்பிக் கொடுத்தச் சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.

நினைத்த புத்தகங்களை எல்லாம் விலை கொடுத்து எல்லோராலும்.. அதற்காக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மக்கள் குறைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் ஒவ்வொரு ஊரிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை சாதகாகப் பயன்படுத்திக் கொண்டு, நல்ல புத்தகங்களை ஒரு சிலரே வைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எடுத்த புத்தகத்தை நூலகத்தில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற விதி உள்ளது. அதனை மீறினால் அதற்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஆனால் இது எதுபற்றியும் கவலைப்படாமல் ஆண்டுக்கணக்கில் நூலகத்தில் எடுத்த புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்காமல் வைத்திருப்பவர்களும் உண்டு. அப்படி நீண்ட காலம் கழித்து நூலகத்தில் ஒப்படைக்கப்பட்ட புத்தகத்தைப் பற்றிய செய்தி தான் தற்போது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

வான்கூவர் நூலகம்

வான்கூவர் நூலகம்


கனடாவில் உள்ள வான்கூவர் பொது நூலகத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக அந்த நூலகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட புத்தகத்தின் புகைப்படங்களையும் அந்த நூலகம் இணைத்துள்ளது.

அப்படியே புதுசு மாதிரி..

அப்படியே புதுசு மாதிரி..

புத்தகத்தை எடுத்தவர் படித்தாரா இல்லை அப்படியே பரணில் போட்டு வைத்து விட்டு, இப்போது தூசி தட்டி திருப்பிக் கொடுத்திருக்கிறாரா என ஆச்சர்யப்படும் வகையில் அந்தப் புத்தகம் உள்ளது. அந்தப் புத்தகத்தில் நூலகத்தில் புத்தகத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய தேதி என 1971 ஏப்ரல் 20ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜஸ்ட் 51 ஆண்டுகள்

ஜஸ்ட் 51 ஆண்டுகள்

கண்ணைக் கசக்கி எல்லாம் நீங்கள் படித்த தேதி சரிதானா என நீங்கள் சரி பார்க்க வேண்டாம். ஆம், சுமார் 51 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்தப் புத்தகம் தற்போது நூலகத்தில் திருப்பி தரப்பட்டுள்ளது. அந்தப் புத்தகம் ஹாரி எட்வர்ட் நெய்ல் என்பவர் எழுதிய தி டெலஸ்கோப் என்பது ஆகும்.

தேங்க்யூ.. சாரி..

தேங்க்யூ.. சாரி..

கூடவே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவர் அழகிய குறிப்பு ஒன்றையும் காகிதத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். அதில், 'புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க கொஞ்சம் தாமதமாகி விட்டது. மன்னியுங்கள். 51 வருடங்கள்.. ஆனாலும் இப்போதும் அதே நிலையில் புத்தகம் உள்ளது. நன்றி' என எழுதப்பட்டுள்ளது.

அபராதம் இல்லை

அபராதம் இல்லை

51 ஆண்டுகள் ஆகி விட்டதால் அந்தப் புத்தகத்திற்கு எவ்வளவு அபராதம் செலுத்தப்பட்டிருக்கும் என்றெல்லாம் நீங்கள் கணக்குப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், தாமதக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட நூலகம் ரத்து செய்து விட்டது. 'பாவம் அவருக்கு ஒரு புத்தகத்தைப் படிக்க இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது போல..' என நெட்டிசன்கள் இதற்கு கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.

இது புதுசு

இது புதுசு

சமீபத்தில் 48 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் ஒருவர், தான் எடுத்த புத்தகத்தை நூலகத்தில் திருப்பிக் கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலானது. அவருக்கு நன்றி தெரிவித்து லைப்ரரி நிர்வாகம் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இப்போது அவருக்கும் சீனியராக, 51 ஆண்டுகள் கழித்து, நூலகத்தில் புத்தகம் ஒன்று திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பது நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+