கொலை மிரட்டல்.. பயமா இருக்கு.. அதிமுக நிர்வாகி மீது புகார் கொடுத்த திமுக எம்.எல்.ஏ.. அதிரடி ஆக்ஷன்!
திமுக எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி மீது எம்.எல்.ஏ புகார் அளித்தார்.
விருதுநகர் : ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியனுக்கு, கட்சி மேடையில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நகர செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் அதிமுக நகர செயலாளர் வக்கீல் முருகேசன் சமீபத்தில், ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனை மேடையில் கடுமையாகத் தாக்கிப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ தங்கபாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக நகர செயலாளர் மீது சேத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

திமுக எம்.எல்.ஏ புகார்
திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் அளித்துள்ள புகாரில், கடந்த ஜனவரி 21ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய ராஜபாளையம் அதிமுக நகர செயலாளர் வக்கீல் முருகேசன், வன்முறையைத் தூண்டும் விதத்திலும், அசிங்கமான வார்த்தைகளாலும், என்னை வெட்டிக் கொல்லப் போவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

செருப்பால் அடிப்பார்கள்
மேலும், "நானும் வக்கீல் முருகேசனும் ஒரே சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். தொகுதி வளர்ச்சிக்காக நடைபெற்று வரும் ராஜபாளையம் பேருந்து நிலையப் பணியைக் கொச்சைப்படுத்தி, பஸ் ஸ்டாண்ட் ரெண்டு பக்கமும் அடைத்துவிட்டதால் மக்கள் பிரதிநிதியாகிய என்னை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்று கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார்.

உயிருக்கு அச்சுறுத்தல்
'உன் ஏரியாக்குள்ள வந்து கூட்டம் போடுறேன்டா... வந்து பாருடா...' என்று ஒருமையில் பேசி மக்கள் பிரதிநிடியாகிய எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வக்கீல் முருகேசன் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என பயமாக உள்ளது. அவருடைய மேடைப் பேச்சால் எனக்கு அவமானமும் உயிர் பயமும் ஏற்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
வக்கீல் முருகேசன் பேசிய வீடியோ பதிவை பார்த்துவிட்டுத்தான், இந்தப் புகாரை அளித்திருக்கிறேன்" என தனது புகாரில் தெரிவித்துள்ளார். தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. அளித்த புகாரின் பேரில் வக்கீல் முருகேசன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்!












Click it and Unblock the Notifications