ராஜா ராணி 2 சீரியலில் அடுத்த சந்தியா இவர்தானா? போலீசாக இனி இவர் தான்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கேரக்டரில் இனி நடிகை ஆஷா கவுடா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா விலகி இருப்பதாக அவரே கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து அவருடைய கேரக்டரில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த கேரக்டரில் ஜீ தமிழ் சீரியலில் நடித்த நடிகை ஆஷா கௌடா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஆஷா கவுடா சமீபத்தில் ஜீ தமிழில் முடிவடைந்த கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

முதல் சந்தியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் தொடர்ந்து பல கேரக்டர்களில் நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என மாறிவிட்டனர். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த சந்தியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். கர்ப்பமாக இருந்த கடைசி மாதம் வரைக்கும் இவர் இந்த சீரியலில் நடித்துவிட்டு தான் விலகி இருந்தார்.

இரண்டாவது சந்தியாவும் விலகல்
கதாநாயகியை தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக வில்லி கேரக்டரில் நடித்து வந்த அர்ச்சனா கேரக்டரில் விஜே அர்ச்சனா நடித்து வந்தார். அவரும் திடீரென இந்த சீரியலை விட்டு தான் விலக இருப்பதாக கூறிவிட்டு விலகி விட்டார். ஆனால் அதற்கான காரணத்தை பற்றி அவர் எந்த தகவலையும் கூறியவில்லை என்ற நிலையில், தற்போது அர்ச்சனா திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அடுத்தது யார்
இதைத்தொடர்ந்து சந்தியா கேரக்டரில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எகிறி வருகிறது. காரணம் பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் சந்தியா ஐபிஎஸ் அதிகாரியாக சொந்த மாவட்டத்திலேயே பொறுப்பு ஏற்று இருக்கிறார். இனி தான் பல்வேறு பிரச்சனைகளும் இந்த சீரியலில் அடுத்தடுத்து வர இருக்கிறது. ஏற்கனவே பிரச்சனைகளுக்கும் சந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டிருப்பது தான் சந்தியா கேரக்டருடைய வேலை. இதில் தற்போது நடித்து வந்த ரியா நன்றாக நடித்து வந்தாலும் இவர் விலகி விட்டதால் இனி யார் அந்த கேரக்டரில் சரியாக பொருந்துவார் என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

மூன்றாவது சந்தியா
இந்த நிலையில் இந்த கேரக்டரில் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வந்த ஆஷா கவுடா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஆஷா கவுடா போலீஸ் கெட்டப்புக்கு அப்படியே பொருத்தமாக இருப்பார். அதனால் இந்த சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக இனி மிரட்டப் போக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து கூற, சரவணனுக்கு இரண்டு ஜோடி ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது மூன்றாவது ஜோடி வந்துவிட்டதை வைத்து நெட்டிசன்கள் சரவணன் கேரக்டரை கலாய்த்து வருகிறார்கள். ஆஷா கவுடா நடித்த எபிசோடுகள் இன்னும் இரண்டு நாட்களில் இருந்து ஒளிபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications