திமிராய் இருப்பதில் தப்பில்லையே..!!நிரோஷா வெளியிட்ட பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: நடிகையை நிரோஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளதாம்.
நடிகர் ராம்கியின் மனைவியான நிரோஷா வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் பலருக்கும் பரீட்சையமானவர்தான். தற்போது சின்னத்திரை தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
நடிகையாக இருக்கும் நிரோஷா பல சோதனைகளை தாண்டி வந்துள்ளாராம். அதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், "தனித்து போராடி கரை சேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே..!!"என்று கேப்ஷனோடு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

மூன்று வயதில் தொடங்கிய பயணம்
வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து பலருடைய மனதில் தனக்கென்று ஒரு இடத்தை அமைத்துக் கொண்டவர் தான் நிரோஷா. இவர் திரை குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நடிக்க கூடாது என்று வீட்டில் பல எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறதாம். நிரோஷாவின் தந்தையான எம் ஆர் ராதா மற்றும் ராதிகா இருவருமே நடிப்பில் தனக்கென்று தனி முத்திரையை பதித்திருந்தாலும், நிரோஷா அவர்களுக்கு எல்லாம் விதிவிலக்காக அமையாமல் நானும் இவர்களை விட சலித்தவர் அல்ல என்று தன்னுடைய நடிப்பு திறமையை மூன்று வயதிலேயே காட்டி இருக்கிறார். நிரோஷாவின் அப்பா எம் ஆர் ராதா ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடன் தாலி பெண்ணுக்கு வேலி எனும் திரைப்படத்தில் நிரோஷா மூன்று வயதிலே எம் ஆர் ராதாவின் மகளாகவே நடித்திருக்கிறாராம். இவருக்கு ஐந்து வயதில் இருக்கும் போது அவருடைய அப்பா இறந்துவிட்டாராம் .

திரைப்படங்களில் அறிமுகம்
நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரியாராக இருந்த நிரோஷா 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறாராம். நடிக்க தொடங்குவதற்கு முன்பு நிரோஷாவின் வீட்டில் அவர்களுடைய அண்ணன்கள் இவருக்கு நடிப்பதற்கு அனுமதி கொடுக்காமல் தான் இருந்திருக்கிறார்களாம். ஆனால், இயக்குனர் மணிரத்தினம் தான் முதன் முதலாக ராதிகாவிடம் பேசி அவருடைய தங்கையை தன்னுடைய முதல் படத்தில் நடிக்க வைத்துள்ளாராம். நிரோஷாவிற்கு நடிப்பதற்கு ஆசை இருப்பதால் அவர் நடிக்கட்டும் என்று அவருக்கு பச்சைக்கொடி காட்டியது ராதிகாதானாம். முதல் திரைப்படம் ஆன அக்னி நட்சத்திரம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு வெற்றியை கொடுத்து இருந்ததாம்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
நிரோஷா பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கமலுடன் இவர் நடித்த சூரசம்ஹாரம் என்னும் திரைப்படம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு சர்ச்சையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தில் அதிக அளவில் முத்த காட்சிகள் இடம் பிடித்திருந்தாலும் இந்த காட்சிகளில் எப்படி புதியதாக நடிக்க வந்த நிரோஷா சரி என்று சொல்லிவிட்டார் என்று பலர் கேள்விகளை எழுப்பி இருந்தார்களாம். அது மட்டுமல்லாமல் பட வாய்ப்புக்காக ராதிகாவின் சகோதரி இப்படி நடிக்க ஓகே சொல்லி விட்டார்களா?? என்று ராதிகாவின் பெயரும்
அந்த நேரத்தில் அடிபட்டுக் கொண்டிருந்ததாம். ஆனால் அதற்குப் பிறகு செந்தூரப்பூவே படத்தில் ராம்கியுடன் குடும்ப பாங்காக இவர் நடித்தது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டதாம்.

காதல் திருமணம்
செந்தூரப்பூவே படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ராம்கி உடன் நிரோஷாவிற்கு காதல் ஏற்பட்டதாம். ஆனால் அப்போது கூட அவர் அதை வெளியில் சொல்லவில்லையாம். ஆனால் அதற்குப் பிறகு நிரோஷாவிற்கு நடைபெற்ற ஒரு ட்ரெயின் விபத்தில் ராம்கி தான் அவரை காப்பாற்றினாராம். அதுமட்டுமல்லாமல் அதற்கு பிறகும் ஒரு திரைப்படத்தில் இவர்கள் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த திரைப்படத்தில் நிரோஷாவை மாடு முட்டுகிற மாதிரி ஒரு சீன் இருந்ததாம். அதில் உண்மையாகவே நிரோஷாவை மாடு முட்ட வந்ததாம் அப்போது கூட ராம்கி தான் அவரை காப்பாற்றினாராம். அதனால் அவர் மீது நிரோஷா காதல் கொண்டு அவர்கள் ரகசிய திருமணம் செய்து வீட்டிற்கு தெரியாமல் மூன்று வருடங்கள் மறைத்து வந்தார்களாம்.

கெத்தான பதிவு
வீட்டில் காதல் திருமணத்திற்கு சம்பாதிக்காததால் எவ்வளவோ அடி வாங்கி ராம்கிவை திருமணம் செய்து கொண்ட நிரோஷா திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சீரியல் தயாரிப்பாளராகவும் அவர் புதுமுகம் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் நிரோஷா, "தனித்து போராடி கரை சேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே! "என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இது நிரோஷாவின் குடும்பத்தினருக்காக பதிவா?? என்று கேள்வியை எழுப்பி இருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் எவ்வளவோ போராட்டத்தை சிறுவயதிலிருந்தே நிரோஷா தாண்டி வந்ததால் இந்த பதிவு சரிதான் என்று அவருக்காக லைக்குகளையும், ஹார்ட்டின்களையும் பறக்க விட்டு வருகிறார்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications