மண்ட மேலே உட்கார்ந்து இருப்பீங்களா ??கோபத்தின் உச்சத்தில் அக்ஷரா...பயந்துபோன போட்டியாளர்கள்
சென்னை: டாஸ்க் செய்ய சொன்னதற்காக கடுப்பில் அக்ஷரா பேசியதைப் பார்த்து போட்டியாளர்கள் பயந்து போய் விட்டனர்.
Recommended Video
என்னதான் கோபம் என்றாலும் இப்படியா நடந்து கொள்வது என்று ரசிகர்கள் அறிவு கூறிவருகின்றனர்.
இவரெல்லாம் இந்திய அணியில் இருப்பதே அதிருஷ்டம்தான்.. இதில் கேப்டன் பதவி வேறா.. கம்பீர் நறுக் கமெண்ட்
கோபத்தின் உச்சத்தில் கண்டதையும் பேசி அனைவரையும் கலங்கடித்து இருக்கிறதா??என்று நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.
தொடங்கிய புது கச்சேரி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் என்றாலே அதில் கலவரங்களும் கச்சேரிகளும் இடம்பெறாமல் இருந்து விடாது. அது வழக்கமாக நடைபெறும் ஒன்றாக இருந்தாலும் தற்போதைய கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக போட்டியை கொண்டு செல்வார்கள் என்று பார்த்தால் இதிலேயும் சண்டை சச்சரவுகளை கொண்டு வந்து அனைவரையும் மிரள வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்று சில நேரங்களில் ரசிகர்களுக்கு நினைக்கத் தோன்றுகிறது என்று கூறிவருகின்றனர்.
ப்ரமோவில் அக்ஷராவின் கோபம்
பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகின்றனர். அதில் ஆரம்பத்திலிருந்தே நான் அதிகமாக குரல் உயர்த்தி பேசமாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்த அக்ஷரா ஒரு சில நேரங்களில் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி விடுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். அது போலத்தான் இன்றைய ப்ரமோவில் அவர் கோபத்தில் உச்சத்தில் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
போர்க்கொடி தூக்கிய அக்ஷரா
கடுமையான வார்டனாக கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் இருக்கும் சிபி ஸ்டூடன்ட் ஆக இருக்கும் அக்ஷராவிடம் நடந்து கொண்டதை பார்த்து இதில் ஒன்றும் தவறாக இல்லையே!!?? என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அக்ஷரா தன்னுடைய உடையை அயன் செய்ய வேண்டும் என்று கூறியதும், உடனே ஓகே போய் சீக்கிரமா முடித்துவிட்டு வா..என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த வார்த்தைதான் அக்ஷராவின் கோபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. எப்படி சீக்கிரமாக வா என்று சொல்லலாம் எனக்கு டைம் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிவிட்டார்.
கோபத்தில் கொந்தளிக்கும் வார்த்தைகள்
கோபத்தின் உச்சத்தில் மண்ட மேல உட்கார்ந்து கொண்டு இப்படி பேசிக்கொண்டு இருந்தா?? எப்படி வேலை செய்வது என்று புலம்பியிருக்கிறார். அதைக்கேட்ட சிபி அப்படி என்றால் என்ன??என்று விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறார். உங்கள் இஷடத்துக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கோபத்தில் பாத்ரூம் உள்ளே சென்று விட்டார் அக்ஷரா. பாத்ரூம் உள்ளே சென்று தன்னுடைய குமுறல்களை வார்த்தைகளாக கொட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இந்தா தொடங்கியாச்சி புது கச்சேரி என்று கலாய்த்து வருகின்றனர்.