என் தங்கச்சி நடுவராக இருந்த அந்த ஷோவில்.. எனக்கு நடந்த அசிங்கம்! ஓபனாக வார்னிங் கொடுத்த அம்பிகா
சென்னை: தமிழ் சினிமாவின் 80-90களில் அழகும், நடிப்புத் திறமையும் கலந்த முன்னணி நடிகைகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா. பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இவர்களில், அம்பிகா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நடிகை அம்பிகா பேட்டி
அந்த பேட்டியில் அம்பிகா மிகவும் அமைதியாகவும், அதே நேரத்தில் மனவேதனையுடனும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இப்போது தாங்கள் நடித்த பழைய படங்கள், பாடல்கள் ரீக்ரியேட் செய்யப்படுவது குறித்து பேசும்போது, "நாங்கள் நடித்த காட்சிகளை இன்றைய தலைமுறை மீண்டும் உருவாக்குவது எனக்கு ரொம்ப சந்தோஷம் தரும். நான் கலையை ரசிப்பவன். அந்த ஆர்வத்தோடு செய்வவர்களைப் பார்க்கும்போது கலைமகளின் பிள்ளைகளைப் பார்க்கும் மாதிரி தான் இருக்கும்," என்று அவர் பெருமையாக கூறினார்.
அதே நேரத்தில், சிலர் அப்படியே இமிடேட் செய்து காமெடி செய்வதும் கூட அழகாக இருந்தால் ரசிப்பேன் என்றும், அது கலையின் ஒரு பகுதி தான் என்றும் அவர் தெளிவாக சொன்னார்.
அழகான காட்சிகளை அசிங்கப்படுத்துறாங்க
ஆனால் சமீபத்தில் பார்த்த ஒரு ரீல்ஸ் வீடியோ அவரை மிகவும் வருத்தமடையச் செய்ததாம். கடற்கரையில் ஒரு அழகான காட்சியை வைத்து ஒருவர் கொடுத்திருந்த ரியாக்ஷன் வீடியோ குறித்து, "அதை பார்க்கும்போது ரொம்ப வருத்தமாக இருந்தது... நல்ல காட்சியை இப்படிப் போட்டு அசிங்கப்படுத்துறாங்களே என்று தோன்றியது," என்று அவர் மனவேதனையுடன் தெரிவித்தார்.
தங்கச்சி இருந்த ஷோவில் நடந்த சம்பவம்
இதில் முடிவில்லை. இன்னொரு சம்பவத்தை குறிப்பிட்ட அவர், சில நாட்களுக்கு முன்பு தனது தங்கச்சி நடுவராக இருந்த ஒரு டிவி நிகழ்ச்சியில், தன்னை பற்றி மிகவும் அவமானமாக காமெடி செய்ததாக கூறினார். "என்னை வைத்து காமெடி என்ற பெயரில் ரொம்ப மோசமாக பேசினாங்க. அதை காமெடி என்று நினைத்திருக்கலாம்... ஆனால் அது ரசிக்கும்படி இல்லை... கோபப்படுத்துற மாதிரி தான் இருந்தது," என்று அவர் ஆதங்கத்துடன் பேசினார். இந்த சம்பவம் எந்த நிகழ்ச்சி என்பது குறித்து அவர் பெயரை சொல்லவில்லை.
நெட்டிசன்கள் சந்தேகம்
அம்பிகா கூறிய "என் தங்கச்சி நடுவராக இருந்த நிகழ்ச்சி" என்ற தகவலை வைத்து, பலரும் அது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் அந்த நிகழ்ச்சியில் ராதா நடுவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
ஒரு காலத்தின் முன்னணி நாயகி
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர். குடும்பக் கதைகளிலும், க்ளாமர் ரோல்களிலும் சம அளவில் வெற்றி பெற்றவர். அதுபோல பல மாநில விருதுகள் மற்றும் ரசிகர் விருதுகளை பெற்றவர்.
திருமணத்திற்கு பிறகு சில காலம் வெளிநாட்டில் வசித்த அவர், பின்னர் மீண்டும் சீரியல் மற்றும் சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

ராதாவின் பயணம்
அதேபோல ராதா தனது சகோதரியுடன் சேர்ந்து 80களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர். அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமாகி ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி, கார்த்திக், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான பல விருதுகளும் வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் அம்பிகா பேசிய இந்த விஷயம் வெளியாகியதிலிருந்து, "லெஜண்ட் நடிகைகளை அவமானப்படுத்தக் கூடாது" "காமெடி என்ற பெயரில் எல்லாவற்றையும் செய்ய முடியாது" என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications