வெகுண்டு எழுந்த தாமரை.. சண்டைக்களமாக மாறிய பிக்பாஸ் வீடு... இதுதான் காரணமா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்குள் வாக்குவாதங்கள் முற்றியிருக்கிறது.
Recommended Video
தற்போது நான்காவது நாளில் தாமரை தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி விட்டார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட்: அபிநய் செய்த செயல்களை புட்டுப்புட்டு வைத்த பாலா.. இவ்வளவு விஷயம் இருக்கா
அல்டிமேட் ஆட்டம் ஆரம்பம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகின்றனர். ஏற்கனவே பல பிக் பாஸ் சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் இதற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. இந்த நிகழ்ச்சி நான்காவது நாளில் தற்போது அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த நிலையில் இதில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.
என்ன நடக்குது அங்கே
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக களமிறங்கி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்த தாமரைச்செல்வி மீண்டும் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். தற்போது தொடங்கி நான்கு நாட்கள் ஆன நிலையில் அவருடைய குரல் உயர்ந்து காணப்படுகிறது. தற்போது நடந்து வரும் செய்தியாளர்கள் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களின் கேள்விகள் கேட்கும் இடத்தில் நடந்த கலவரத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர். நடப்பது பட்டிமன்றமா அல்லது செய்தியாளர்கள் சந்திப்பா என வித்தியாசம் தெரியாமல் தாமரைச்செல்வி நடந்துகொண்டது பலருக்கும் வியப்பாக இருந்து வருகிறது என்று கூறிவருகின்றனர்.
இதுக்கெல்லாம் சண்டையா
சுஜா மற்றும் தாமரை செல்வி இடையே கருத்து மோதல்கள் நடக்கின்றது. நான் கேள்வி கேட்கணும் என்று சுஜா கத்திக் கொண்டிருக்கும்போது தாமரைச்செல்வி அது என்ன ஒரு ஆளு மட்டும் சொல்றது என்ற பதில் கேள்வியை எழுப்பியிருக்கிறார். அதற்கு சுஜாவாருணி என்னை ஒரு கேள்வி கூட கேட்க விடவில்லை என்று கூறியிருக்கிறார். கேள்வி யார் வேணாலும் கேட்கலாம் என்று சொல்லி இருந்தது. அதனால்தான் நான் கேட்கிறேன் என்று தாமரைச்செல்வி கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு அப்போது எல்லாத்துக்கும் காலம் கட்டாயம் என்று இருக்கிறது என சுஜா கிளாஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
திரும்பும் பக்கம் எல்லாம் சண்டை
பட்டிமன்றம் என்றால் எனக்கு கோபம் வந்து நான் அவங்க மாதிரியே பேசினால் அது சரி ஆனால் இது பிரஸ்மீட் அதனால் நான் கேள்வி கேட்பேன் என்று தன் தரப்பு வாதத்தை சுஜா எடுத்து கூறி வருகிறார். அதற்கு தாமரைச்செல்வி டாஸ்க் என்றால் எல்லோரும் நியாயமா விளையாடுறீங்களா?? அப்புறம் ஏன் இதை பட்டிமன்றம் பிரஸ் மீட் என்று எதுக்கு அவங்க பேசுறாங்க என்று காரசாரமாக சினேகனிடம் கூறியிருக்கிறார். திரும்பும் திசையெல்லாம் சண்டை சச்சரவாக இருக்கும் இந்த ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் அல்டிமேட் வீடு இன்று அனலாக ஜொலிக்கிறது என்று கூறிவருகின்றனர்.