இந்த வாரம் என்ட் கார்ட் போட்ட பிக் பாஸ்...கடைசியில் மாட்டியது இவர்தானா??!!
சென்னை: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
இத்தனை முறை கடைசி விளம்பில் வந்தாலும் ஜெயித்த நபரை இப்படி தூக்கி விட்டீர்களே என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
டாஸ்க்குகளில் வெறித்தனமாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தாலும் கடைசி நேரத்தில் இப்படியா நடக்கணும் என்று ரசிகர்கள் சலிப்பு கொட்டி வருகிறார்கள்.

ரசிகர்களின் மனவருத்தம்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பல நேரங்களில் விறுவிறுப்பும் சில நேரங்களில் அதிருப்தி ஏற்பட்டு விடுகிறது என்று ரசிகர்களுக்கு பொதுவான ஒரு கருத்து இருந்து வருகிறது. அந்த மாதிரி தான் தற்போதைய வாரம் இருந்து வருகிறது என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். என்ன தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஓட்டு போட்டு எலிமினேஷன் ஆகும் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இருந்தாலும், ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கை படி எலிமினேஷன் நடைபெறவில்லை என்று ரசிகர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்
கடந்த வாரத்தில் அபிநய் வெளியே செல்வார் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர் பாதுகாக்கப்பட்டு அவருக்கு பதிலாக இமான் அண்ணாச்சி வெளியேற்றம் ஆகிவிட்டார். இது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. ஆனால் அடுத்த வாரத்தில் அபிநய் விளையாட்டு வெறித்தனமாக இருந்தது. எலிமினேஷனுக்கான போட்டிகளில் ஒவ்வொன்றிலும் தன்னுடைய முழு திறமையை காட்டி கொண்டிருந்தார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் இந்த வாரம் அவர் பாதுகாக்கப் படுவார் என்று நம்பியிருந்த நேரத்தில் தற்போது இந்த வாரத்தில் அபிநய் வெளியற்றப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
கடந்த வாரம் வரைக்கும் பாவனி மற்றும் அபிநய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடில் யார் மீது தவறு என்று ரசிகர்கள் பேசி வந்தனர். ஆனால் இவர்களைப் பற்றி இனி யாரும் பேசக்கூடாது என்று சொல்லிய பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகமாக யாரும் இவர்களை கண்டுகொள்வதில்லை. அதனால் இந்த வாரம் வெளியேற்றி விடலாம் என்று பிக்பாஸ் நினைத்துவிட்டார் போல என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் முதல் வாரத்தில் தொடங்கி தற்போதைய வாரம் வரைக்கும் தொடர்ந்து நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராக அபிநய் இருந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் இவர் காப்பாற்ற பெற்று மீண்டும் தன்னுடைய விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாலும், இந்த முறை நன்றாக விளையாடிய பிறகும் வெளியேற்றப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications