ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நிரூப்...ஓ...இதுதான் காரணமா??
சென்னை: இன்றைய ப்ரமோவில் நிரூப் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நிரூப் செய்த திடீர் செயல் ரசிகர்களை மட்டுமல்லாமல் நெட்டிசன்களையும் யோசிக்க வைத்துள்ளது.

நிரூப் செய்த திடீர் செயல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைய இந்த ஒரு வாரமே இருக்கும் நிலையில் இதில் போட்டியாளராக அறிமுகமாகி தற்போது கடைசி வாரத்தில் இரண்டாவது போட்டியாளராக சேவ் ஆகியிருக்கும் நிரூப் தன்னுடைய ரசிகர்களிடம் தன் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். ஏற்கனவே பலமுறை தன்னை ரசிகர்கள் காப்பாற்றுவார்கள் என்று உறுதியாக கூறி வந்த நிலையில் தற்போது திடீரென்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இருப்பது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

உள்ளம் குழந்தை தானாம்
இந்த சீசனில் ஆரம்பத்தில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் அதிகமான போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். அதில் மாடலிங் ஃபீல்டை சேர்ந்தவரான நிரூப் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார். அவருடைய பிரம்மாண்டமான உருவத்தை பார்த்து ரசிகர்கள் பலர் ஆரம்பத்தில் மிரண்டு போய் இருந்தனர். உருவம் மட்டும் தான் பெரியதாக இருக்கிறதே தவிர உள்ளம் குழந்தை போல இருக்கிறது என்று போகப்போக போட்டியாளர்களும், ரசிகர்களும் புரிந்து கொண்டனர்.

நிரூபுக்கு பிடித்த போட்டியாளர்
பிரியங்கா தான் இந்த வீட்டிற்குள் அதிகமாக நிரூபுக்கு பிடித்த போட்டியாளர். அது மட்டுமல்லாமல் தோழியாகவும் இருந்து வந்தார். ஆனால் டாஸ்க் என்று வந்துவிட்டால் இவர்கள் இருவரும் செய்யும் அலப்பரைகள் அளவுக்கு அதிகமாக இருந்து வந்தது. சண்டையில் இருவரும் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வது புதியது அல்ல. ஒவ்வொரு டாஸ்க்கிலும் இது நடந்து வந்தாலும், டாஸ்க் முடிந்ததும் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கொள்வது பார்க்கும்போது ஒரு சில நேரங்களில் நன்றாக இருந்தாலும் பல நேரங்களில் கடுப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வந்தனர். அதனால்தான் நேற்றைய எபிசோடில் கூட கமல் முன்னிலையில் பல நேரங்களில் நான் பிரியங்காவை காயப்படுத்தி இருக்கிறேன், ஆனால் எனக்கு ரொம்ப பிடித்தது பிரியங்கா தான் என்று அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நிரூப்
இந்த நிலையில் பல டாஸ்க்குகளில் நிரூப் இருந்தால் எங்களால் ஃபிசிகல் ஆக விளையாட முடியாது என்று போட்டியாளர்கள் பலர் நிரூப்பை ஒதுக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால் கடைசியாக இவர் இரண்டாவது போட்டியாளராக இந்த டாஸ்க்கில் பாதுகாக்கப்பட்டதும் அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வாரம் டைட்டிலை ஜெயிக்கப்போவது யார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நேரத்தில், தனக்கு ஓட்டளிக்க வேண்டி போட்டியாளர்கள் ரசிகர்களிடம் பிரச்சாரங்களை தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் தான், ஏதோ ஒரு இடத்தில் மக்களை ஏமாற்றி விட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது. அதனால் மக்கள் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூப் பேசியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை அளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு சில நெட்டிசன்கள் நிரூப் பேசுவது சத்தியமாக ஒன்றும் புரியவில்லை என்று குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications