Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவி செய்த செயலை பார்த்து கதறி அழுத அபிநய்..ஒரு வழியா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி போட்டாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் அபிநய் செய்த செயல் ரசிகர்களை வியப்படைய செய்ய வைத்திருக்கிறது.

ஏற்கனவே பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தற்போது அபிநய் மனைவி செய்த செயல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

திரை குடும்ப வாரிசு

திரை குடும்ப வாரிசு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 5 வது சீசனில் ஒரு போட்டியாளராக களமிறங்கிய அபிநய் ஒரு திறை குடும்பத்தை சேர்ந்தவர் என்பது இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான பிறகு தான் பலருக்கும் தெரிந்திருந்தது. இவர் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் ஆக இருந்ததால் தன் துறையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் ஆகியிருந்தாலும் ரசிகர்களால் பல வாரங்கள் பாதுகாக்கப்பட்டு 80 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்தார்.

பாவனியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு

பாவனியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சலசலப்புக்கு ஆளான அபிநய் ஆரம்பம் முதலே பாவனி ரெட்டிக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவருக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் ஆரம்பத்தில் வந்து கொண்டிருந்தது. இவர் பாவனியுடன் பழகும்போது பாவனிக்கு இவர் நட்பைத் தாண்டி பழகுகிறார் என்ற ஒரு அச்சமும் ஏற்பட்டதும், இவரிடம் நேரடியாகவும் இவரைப் பற்றி சக போட்டியாளர்கள் இடமும் பேசி வந்துள்ளார். இந்த செய்தி நாட்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சனை கமல் வரைக்கும் சென்று உள்ளது.

தொடர்ந்த வதந்திகள்

தொடர்ந்த வதந்திகள்

அபிநய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்டது அவருடைய மனைவி என்ன மாதிரி எடுத்துக் கொள்வார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியேறிய அபிநய் தன்னுடைய மனைவி, இந்த மாதிரி விஷயத்தில் சாதாரண பெண் எப்படி நடந்து கொள்வாரோ அது போலத்தான் நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணவரின் பெயரை மாற்றிவிட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. விவாகரத்து வரைக்கும் சென்று உள்ளது என்றெல்லாம் வதந்திகள் கிளம்பி வந்தது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

வதந்திக்கு முற்றுப்புள்ளி

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் அபிநய் கலந்துகொண்டுள்ளார். தொடர்ந்து மூன்றாவது வாரமாக இவருடைய பெயர் எலிமினேஷனில் இருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலர் தின கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் அவருடைய மனைவி மற்றும் குழந்தையும் காதலர் தின வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் ஒருவழியாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இனி அபிநய் வாழ்க்கையில் கொண்டாட்டம் தான் என்று கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+