மீண்டும் அல்டிமேட்டை பற்றவைக்க கிளம்பி விட்ட வைல்ட் கார்ட் போட்டியாளர்..இனி ஆட்டம் வேற லெவல் தான்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் அறிமுகமாக இருக்கிறார்.
ஏற்கனவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அதே போட்டியாளர் மீண்டும் களம் இறங்குவதால் நிகழ்ச்சி இனி சூடுபிடிக்க போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதல் வைல்ட் கார்ட்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யமும் கலவரமும் அதிகமாகவே இருந்துவருகிறது. 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்புவதால் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும் விறுவிறுப்பு குறையவில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் 14 போட்டியாளர் அறிமுகமாகி தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கும் நிலையில் தற்போது முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைய இருக்கிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ஏற்கனவே பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் நடைபெற்றது போலத்தான் இந்த அல்டிமேட் மேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுவும் ஐந்தாவது சீசனில் ஆரம்பம் முதலே கலக்கி வந்த அபிஷேக் ரசிகர்களால் இரண்டு வாரங்களில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டும் மீண்டும் களம் இறக்கப்பட்டார். ஆனால் மீண்டும் இரண்டு வாரங்களில் நிகழ்ச்சியை விட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மாதிரிதான் தற்போதைய அல்டிமேட் நிகழ்ச்சியிலும வைல்ட் கார்டு போட்டியாளராக அறிமுகமாகும் போட்டியாளரின் நிலைமையும் இருக்குமா என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முதல் எலிமினேஷன்
நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்க்காகவும், நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்தால் தான் நாம் ப்ரோமோவில் இடம்பெற முடியும் என்று போட்டியாளர்கள் நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு தான் தற்போது டாஸ்க்குகளில் தங்களுடைய பெர்பாமன்ஸை ஹெவியாக காட்டி வருகின்றனர். அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பற்ற வைக்கிறேன் என்று கூறி நிகழ்ச்சிக்கு விருவிருப்பு ஏற்றி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கும் டென்ஷன் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் முதல் வாரத்தில் நிகழ்ச்சியை விட்டு ரசிகர்களால் சுரேஷ் சக்கரவர்த்தி அனுப்பிவைக்கப்பட்டார்.

விட்ட இடத்தை பிடிப்பாரா
இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி அறிமுகமாக போகிறார் என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பரவி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் யார் அவர் என்று ஆர்வத்தோடு தேடிப்பார்த்து வருகின்றனர். அது சுரேஷ் சக்கரவர்த்திதானாம். அவர்தான் இந்த வாரத்தில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டை தீப்பிடிக்க வைக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நிகழ்ச்சியைப் பற்றி நன்றாக தெரிந்த சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்குவதால் இனி விளையாட்டு வேற லெவல் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
-
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! -
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி!












Click it and Unblock the Notifications