விந்தணுவில் ஆபரணம்...அதற்கு சொன்ன விளக்கம்..குவியும் ஆர்டர்கள்
சென்னை: தன்னுடைய கணவனின் விந்தணுவில் இருந்து ஆபரணங்களை செய்து வெளிநாட்டு பெண் அனைவரையும் வியப்படையிலே செய்திருக்கிறார். இந்த மாதிரி தான் செய்வதற்கு காரணம் என்னவென்று அவர் சொன்னதை கேட்டு பலர் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.
தற்போது விதவிதமாக ஆபரணங்கள் ட்ரெண்ட் ஆவதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல பார்க்கவும் செய்து இருக்கிறோம். ஆனால் தற்போது வெளியான இந்த புதுவிதமான நகை அனைவருக்கும் வித்தியாசமாகத்தான் இருந்து வருகிறதாம்.
கணவருடைய விந்தணுவில் இருந்து கைகளில், காதுகளில் என விதவிதமாக ஆபரணத்தை செய்து தொங்க விட்ட பெண்ணை பார்த்து நெட்டிசங்களே திகைத்துப் போய் இருக்கின்றார்களாம்.
சிபிஐ விசாரணைக்கு ஓகே.. மோடியை குஷிப்படுத்திய ஜெகன் மோகன் ரெட்டி.. நெருக்கடியில் சந்திரபாபு நாயுடு
இது புது ஐடியாவாக இருக்குதே
கனடாவை சார்ந்த அமன்டா பூத் என்னும் என்கிற பெண் தன்னுடைய கணவரின் விந்தணுவில் இருந்து அனைவரும் வியப்படையும் வகையில் ஆபரணங்களை செய்து இருக்கிறார். யாரும் செய்ய துணியாத ஒரு செயலை இந்த பெண் செய்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது ஒரு சிலர் நெகட்டிவ் ஆக கமெண்ட்களை அளித்து வந்தாலும் பலர் இதுவும் நல்ல ஐடியா தான் தனக்கு நெருக்கமானவர்களை தன்னோடு வைத்திருக்கும் ஆசையை நிறைவேற்றுகிறது என்று இதற்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்களாம். என்னதான் விதவிதமான ஆபரணங்களை அனைவரும் அணிந்து கொண்டு இருந்தாலும் தற்போது ட்ரெண்டாக வலம் வரும் இந்த புதுவித முயற்சி தனக்கு பெரிய அளவில் ஆர்டர் கிடைத்து வருவதாக அந்தப் பெண் கூறி இருக்கிறார்.
சின்னத்திரை நடிகைகள் செய்த செயல்
சீரியல் நடிகைகள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் என பலரும் தங்களுடைய சில நினைவுகள் எப்போதும் தங்களுடைய இருக்க வேண்டும் என்பதற்காக கர்ப்ப காலத்தில் தங்களுடைய வயிற்றை பெல்லி காஸ்டிங் எடுத்து வைத்து கொள்கின்றனர். தற்போது கூட சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரையை சார்ந்த ஆல்யா மானசா தனது கர்ப்ப காலத்தில் பெல்லி காஸ்டிங் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்படையில் செய்தார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த சுஜா வருணி மற்றும் சின்னத்திரை நடிகையான ஸ்ரீதேவி அசோக், ஆலியா மானசா என பலரும் தாய்ப்பாலில் ஆபரணங்களை செய்து தங்களுடைய நினைவுகளை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.
காரணம் இதுதானாம்
விதவிதமாக பலரும் தங்களுடைய நினைவுகளை பத்திரப்படுத்த விரும்பும் நிலையில் கனடா பெண் எடுத்திருக்கும் புது முயற்சி ஒரு சிலரை முகம் சுளிக்க வைத்திருந்தாலும் ஒரு பக்கம் இவருக்கு ஆதரவு அதிகரித்து தான் கொண்டிருக்கிறது. இதில் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கனடா பெண்ணான அமண்டா தன்னுடைய கணவரிடம் இருந்து விந்தணுக்களை சேகரித்து அதை விதவிதமான பல நகைகளாக மாற்றி அப்படியே அனைவருக்கும் செய்து காட்டியுள்ளார். அவர் நகைகளை செய்த விதத்தையும் அது மட்டுமல்லாமல் தன்னுடைய கணவர் தனக்கு நெருக்கமாகவும், அதே சமயத்தில் எப்போதும் அவர் கூட இருக்கிற ஃபீலிங் இருக்க வேண்டும் என்று தான் இப்படி செய்தேன் என்று அமன்டா கூறியதைக் கேட்டு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
குவியும் ஆர்டர்கள்
அமண்டா பூத் முயற்சியை பார்த்த பலர் தங்களுடைய உறவினர்களின் அஸ்தியிலிருந்து நகைகளை செய்து கொடுக்க முடியுமா..!!?? என்று கேட்டு வருகிறார்களாம். அது மட்டும் அல்லாமல் உடலில் உள்ள பல்வேறு பொருள்களில் இருந்து விதவிதமாக ஆபரணங்களை செய்து கொள்ளலாம் என்று இவர் வழிகாட்டி உள்ளார். இதை பார்த்த பலரும் இவருக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதைப் பார்த்தால் நெட்டிசன்கள் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறதோ. .தெரியவில்லையே..!!?? என்னமா இப்படி பண்றீங்களேம்மா...!! என்று பஞ்சு வசனத்தை பேசி வருகிறார்கள்.