இருந்தேன் வறுமையில...வளர்ந்து வந்தேன் திறமையில.. கலாய்ப்பவர்களுக்கு பதில் சொன்ன இசைவாணி
சென்னை: தன்னை பற்றி அதிகமாக நெகட்டிவ் கமெண்டுகள் வருவதால் அதற்கு பதில் சொல்லும் விதமாக பாட்டுப்பாடி சொல்லி இருக்கிறார் இசைவாணி.
Recommended Video
இசைவாணியின் மிரட்டலான பாடலைப் பார்த்து பல ரசிகர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போகிறார்களாம்.
இசைவாணியின் தீவிரமான ரசிகர்கள் அவருடைய பாடல்கள் எப்போது வெளியாகும் என்று ஆர்வத்தோடு கேட்டு வருகிறார்கள்.

கலக்கும் கானா பாடகி
இந்நிகழ்ச்சியில் அறிமுகமாகி கானா பாடகியாக பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமான இசைவாணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மேடை நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களில் பின்னணி பாடகியாகவும் இருந்துள்ளார். இவருடைய பாடல்களை தெரிந்தவருக்கு இவர்தான் இந்த பாடல்களை பாடினார் என்று தெரியாமல் இருந்து வந்தது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவர் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். கதை சொல்லும் டாஸ்க்கில் இவர் தன்னுடைய இளமைக்கால கதையை சொல்லி அனைவருடைய அனுதாப அலையும் பெற்றுவிட்டார்.

ரசிகர்களின் கருத்து
இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இமான் அண்ணாச்சிக்கும், இசைவாணிக்கும் அடிக்கடி பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பிடிக்காமல் தான் நடந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் மனதிற்குள்ளே கோபத்தை வைத்துக்கொண்டு வெளியே சிரித்த முகமாக இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வெற்றிக்கு கிடைத்த வரவேற்பு
தன்னுடைய திறமையை தனக்கான இடத்தில் சிறப்பாக காட்டவேண்டும் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ஒரு சில நபர்களும் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் தான். அந்த மாதிரிதான் இசையும் தன்னுடைய காந்தக் குரலால் கானாபாடல் மூலம் கலக்கி வருகிறார். இவருடைய பாட்டுக்கு பலபேர் ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய விளையாட்டை சரியாக விளையாடவில்லை, தன்னுடைய கருத்துக்களை சரியாக எடுத்து உரைக்கவில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் 50 நாட்கள் வரைக்கும் இவர் இந்த வீட்டிற்குள் இருந்தது இவருடைய வெற்றிக்கு கிடைத்த வரவேற்பு தான் என்று பலர் கூறி வருகின்றனர்.

பாடலில் பதில்
தற்போது மார்கழி மாத மக்கள் இசை நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி பிசியாக இருந்து வரும் இசைவாணி தான் சொந்தமாக இயக்கியிருக்கும் பாடலை பாடி அனைவருக்கும் மிரட்டல் விடுத்திருக்கிறார். இவருடைய கானா பாடல் பலருக்கும் பெரிதாக இருந்தாலும் இவருடைய காந்தக் குரல் பலரையும் வசீகரித்து விடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் ரசித்து உள்ளது. ஆனாலும் இவருக்கு அதிகமான நெகட்டிவ்வர்ஸ் இருந்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இவருக்கு எதிராக கமெண்டுகளை அனுப்பும் ரசிகர்களுக்கு தன்னுடைய புது பாடல் பதிலாக இருக்கும் என்று இவர் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications