கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் - தமிழகம் முழுவதும் கோலாகலமான ஏற்பாடுகள்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் வரும் 3-ந் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிறந்தநாளன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
அதன் பின்னர் வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் செல்லும் கருணாநிதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறார்.
மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். கருணாநிதி நிறைவுரை நிகழ்த்துகிறார். இது தவிர தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள்.
கடந்த ஆண்டு கருணாநிதியின் மகளும் எம்.பியுமான கனிமொழி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிறையில் இருந்ததால் ஏகத்துக்கும் அப்செட்டாகி இருந்தார் கருணாநிதி. இம்முறை கனிமொழியும் வந்துவிட்டார்.. கருணாநிதியின் தகத்தகாய சூரியனான ஆ. ராசாவும் ஜாமீனில் வந்துவிட்டார். இருப்பினும் ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையே உச்சகட்ட உள்குத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எத்தனை உள்குத்து களேபரங்கள் காத்திருக்கின்றனவோ?
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications