அதிகாரிகளுக்கே தெரியும்.. அவர்களிடம் கேளுங்கள்.. வருமான வரி பற்றிய கேள்விக்கு ரஜினி சொன்ன பதில்!
வருமான வரி முறைகேடு தொடர்பான கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த், நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன், இது வருமான வரித்துறை அலுவலகத்துக்கே தெரியும் என்று பதில் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: வருமான வரி முறைகேடு தொடர்பான கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த், நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன். இது வருமான வரித்துறை அலுவலகத்துக்கே தெரியும் என்று பதில் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மீதான வருமான வரி புகாரும், பின்பு அது வாபஸ் வாங்கப்பட்டதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2002 முதல் 2005 வரை வாங்கிய வருமானத்திற்கு வரி கட்டவில்லை என்று ரஜினிக்கு எதிராக புகார் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு வருமானவரித்துறை சார்பாக அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்படி 2002 - 05ம் ஆண்டில் 66 லட்சத்து 21 ஆயிரம் அபராதம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் ரஜினி இதை செலுத்தவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் வாங்கியது. ரஜினிக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினிக்கு எதிரான இந்த வழக்கையும் திரும்ப பெறுகிறோம் என்று வருமான வரித்துறை தெரிவித்தது .

வரி விவரம்
இந்த வருமான வரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் வருமான வரித்துறையிடம் பதில் அளித்துள்ளார். அங்கு அவர் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், நான் சம்பாதித்த பணத்திற்கு வரி கட்டிவிட்டேன். இது நான் கடன் கொடுத்தது. அதிலும் நான் யாருக்கும் கடனை தொழிலாக கொடுக்கவில்லை. தெரிந்தவர்களுக்கு மட்டும் பணம் கொடுத்தேன். அதில் வட்டி வந்தது. இந்த வட்டிக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது.

என்ன விளக்கம்
இதை நான் தொழிலாக செய்யாத காரணத்தால் வரி கட்டவேண்டிய அவசியம் கிடையாது. இதில் எனக்கு பலர் கடனை திரும்ப தரவில்லை. இதனால் எனக்கு 33 லட்சம் ரூபாய் வரை இழப்பு தான் ஏற்பட்டது. இதை தொழிலாக செய்யவில்லை. நண்பர்களுக்கு உதவியாக செய்தேன். அதனால் இதற்கு வரி கட்ட தேவையில்லை என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் இந்த வரி முறைகேடு பெரிய சர்ச்சையானது.

பதில் அளித்தார்
இந்த நிலையில் இதற்கு தற்போது ரஜினிகாந்த் சென்னையில் அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன். இது வருமான வரித்துறை அலுவலகத்துக்கே தெரியும். இதை நீங்கள் வருமான வரி அதிகாரிகளிடம் கூட கேட்டு தெரிந்து கொள்ளலாம். சட்டவிரோதமாக எந்த செயலும் செய்யவில்லை, என்று நடிகர் ரஜினிகாந்த குறிப்பிட்டு இருக்கிறார்.

ரஜினி
முதலில் இந்த கேள்வியை கேட்டதும் ரஜினியின் முகம் கோபமாக மாறியது. இது தொடர்பான மற்ற கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்துவிட்டார். அதேபோல் ரஜினி வட்டிக்கு விட்டது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. வரி காட்டாதது குறித்த கேள்விக்கு மட்டுமே ரஜினி பதில் அளித்தார். வட்டி தொடர்பான கேள்விக்கு எதுவும் சொல்லாமல், வேறு விஷயங்கள் குறித்து பேச தொடங்கிவிட்டார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications