சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 21, 2026 episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 21ஆம் தேதிக்கான எபிசோடில், அண்ணாமலையின் பிறந்த நாளை முத்துவும் மீனாவும் சர்ப்ரைஸாக கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் முத்து மீனா வாழ்க்கையிலும் ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடில், (Siragadikka Aasai serial update) அண்ணாமலையின் 60வது பிறந்தநாள் என்பதால், அவரின் நெருங்கிய நண்பரான பரசு காலையிலேயே கோவிலுக்கு போய்ட்டு அண்ணாமலை பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு, பிரசாதத்துடன் வீட்டிற்கு வருகிறார். அப்போது ஹாலில் அண்ணாமலை மட்டும் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து, "இது உன் 60வது பிறந்தநாளாச்சே, நீ பெரிய அளவில செலிபிரேட் பண்ணிட்டு இருப்பேன்னு நினைச்சேன், ஆனா இங்க யாரையும் காணோம்" என்று கேட்கிறார்.
அண்ணாமலை பிறந்தநாள்
அந்த நேரத்தில் விஜயா அங்கு வருகிறார். பரசு அவரிடம் "இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?" என்று கேட்க, விஜயா சும்மா "இன்னைக்கு சனிக்கிழமை" என்று பதில் சொல்கிறார். அதன்பின் மனோஜிடம் கேட்க, அவரும் அதேபோல பதில் சொல்கிறார். ரவியும் அதேபோலவே கூறுகிறார். கொஞ்ச நேரத்தில் முத்து வீட்டிற்குள் வருகிறார். அவரும் அண்ணாமலையிடம் பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். இதைப் பார்த்து "இவங்க எல்லாரும் மறந்தது ஓகே, ஆனா முத்துவும் மறந்துட்டானே" என்று பரசு கவலைப்படுகிறார்.

இதுதான் சர்ப்ரைஸ்
அதற்குப் பிறகு திடீரென்று வெளியிலிருந்து மேளம் சத்தத்துடன் முத்து வீட்டிற்குள் வருகிறார். அவருடன் மீனாவும் வருகிறார். அவர்கள் கையில் மாலை, தாம்பூலம், புதிய உடைகள் எல்லாம் கொண்டு வருகிறார்கள். அண்ணாமலையின் 60வது பிறந்தநாளுக்காகவே இந்த சர்ப்ரைஸை முத்துவும் மீனாவும் திட்டமிட்டு வைத்திருந்தது தெரிய வருகிறது. அதே சமயம் ஸ்ருதியும் அங்கு, கேக் கொண்டு வருகிறார். "உனக்கு எப்படி தெரியும்?" என்று விஜயா கேட்க, "மீனா நேற்றே சொல்லிட்டாங்க" என்று ஸ்ருதி கூறுகிறார்.
மகிழ்ச்சியில் சிறகடிக்க ஆசை குடும்பம்
பிறகு அனைவரும் சேர்ந்து கேக் வெட்ட முடிவு செய்கிறார்கள். கேக் வெட்டப் போகும் நேரத்தில் ரோகிணி அங்கு வருகிறார். "மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தேன்" என்று கூறுகிறார். ஆனால் விஜயா அவரை வீட்டின் வாசலிலேயே தடுத்து நிறுத்தி, "இது நல்ல நாள், பிரச்சனை பண்ணாம கிளம்பி போ" என்று அனுப்பிவிடுகிறார். கிளம்பும் முன், "அடுத்த பிறந்தநாளுக்கு நானும் உங்க கூட இருப்பேன் பாருங்க" என்று சவால் விட்டுச் செல்கிறார் ரோகிணி.

ரோகிணியின் சவால்
இதற்குப் பிறகு வீட்டில் கேக் வெட்டி அனைவரும் கொண்டாடுகிறார்கள். அதன் பிறகு முத்துவுடன் அனைவரும் கோவிலுக்கு செல்கிறார்கள். முத்து புதிதாக ஒரு வேன் வாங்கியிருப்பதால், அதற்கு பூஜை செய்யப் போகிறார்கள். அங்கே முத்துவின் குடும்பத்தாருடன் மீனாவின் குடும்பத்தாரும் சேர்கிறார்கள். பூஜை முடிந்தபின் அண்ணாமலை கையால் சாவியை வாங்கிக் கொண்டு முத்து வண்டியை ஓட்ட ஆரம்பிக்கிறார். அந்த வேனுக்கு "MM டிராவல்ஸ்" என்று பெயர் வைத்திருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை எபிசோடு
மறுபுறம் சீதா கோவிலை சுற்றி கும்பிட்டு கொண்டிருக்கும்போது, திடீரென்று தனது தாலி காணாமல் போனதை கவனிக்கிறார். அதனால் பதறி போகிறார். அந்த நேரத்தில் ஒரு முக்காடு போட்ட பெண், மீனாவை இடித்துவிட்டு வேகமாக கோவிலிலிருந்து வெளியே ஓடிச் செல்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சஸ்பென்ஸுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications