எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகல்!? காரணத்தை விளக்கிய நடிகர்.. அட இதுதான் உண்மையாம்!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நாச்சியப்பனாக நடிக்கும் சௌமியன் அந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதற்கான விளக்கத்தை அவர் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
இதனால்தான் இப்படி ஒரு செய்தி வெளியே வந்தது என்று தெரியவில்லை ஆனால் நான் இந்த சீரியலை விட்டு விலகவில்லை என்று ரசிகர்களுக்கு தன்னுடைய விளக்கத்தை செளமியன் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களின் விருப்பம்
எதிர்நீச்சல் சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை அதற்கு முன்பாக கொண்டு வர வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரோஜா சீரியல் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வந்த நிலையில் அந்த சீரியல் முடிவடைந்தால் அந்த இடத்திற்கு ஒன்பது மணிக்கு இது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நாச்சியப்பன் கேரக்டராக நடிக்கும் நடிகர் சௌமியன் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது.

சௌமியனின் ஆரம்பமும் நடிப்பும்
ஜனனியின் அப்பாவாக சௌமியன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பொதுவாக நடிக்கும் அனைத்து கேரக்டர்களுமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விடும். அந்த மாதிரி தான் நாச்சியப்பன் கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் சௌமியன் ஒரு புகைப்படக் கலைஞர் ஆக இருந்து பல பங்க்ஷன்களில் மட்டுமல்லாமல் திருமண வீடுகளிலும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார் .அதற்குப் பிறகு ஒரு ஒரு திரைப்படத்தையும் இவர் தயாரித்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் ரம்பா மற்றும் லிவிங்ஸ்டன் நடித்த சுந்தர புருஷன் திரைப்படத்தில் ரம்பாவின் மாப்பிள்ளையாக இவர் நடித்திருக்கிறாராம்.

ரஜினியுடன் நடிப்பு
அதுமட்டுமல்லாமல் ரஜினி நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியின் தங்கையின் கணவராகவும் இவர் நடித்திருக்கிறாராம். ஆரம்பத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியலில் ஒரு ஸ்டிர்க்ட்டான அப்பாவாக நடித்து வந்த சௌமியம் திடீரென இந்த சீரியலில் இருந்து விலக இருக்கிறாராம். அவரை தொடர்ந்து இந்த சீரியலில் இனி நாச்சியப்பனாக பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அப்பாவாக நடிக்கும் நடிகர் தான் அறிமுகமாக போகிறார் என்ற செய்திகள் பரவி வந்தது. இதை குறித்து சௌமியன் முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதுதான் உண்மை
அதில் சமீப காலமாகவே பல செய்திகள் நான் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகுவதாக பரவி வருகிறது. அது எல்லாம் பொய். அதனால் இனி இப்படி ஒரு செய்தியை பரப்பாதீர்கள் என விளக்கம் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே செளமியன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்திரா சீரியலில் கதாநாயகியின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தான் இந்த சீரியலை விட்டு இவர் விலக இருப்பதாக செய்திகள் பரவி இருக்கலாம். ஆனால் அதற்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இனி நான் அப்படி ஒரு முடிவு எடுக்கப் போவதில்லை என்று இவர் உறுதியாக கூறியிருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு எதிர்நீச்சல் சீரியல் மூலமாகத்தான் இவர் மீண்டும் ரசிகர்களின் மனதில் வேரூன்ற தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் பிரபலப்படுத்திய சீரியலில் இவர் விலகி விட்டாரே என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இப்போது இவர் விலகவில்லை அதற்கு காரணமும் இல்லை என்று கூறிய பதிலை கேட்டு சிலர் ஆறுதல் அடைந்திருக்கின்றனர். ஏற்கனவே ஜனனியின் அப்பா அதிகமாக இப்போது காட்டப்படுவதில்லை கதை முழுக்க குணசேகரனின் வீட்டிற்குள்ளே நடைபெறுவதால் ஜனனியின் குடும்பத்தை மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் தான் காட்டுகின்றனர். இந்த நிலையில் இனி வரப்போகும் எபிசோடுகளில் சௌமியனின் நடிப்பு தெரிகின்ற மாதிரி எபிசோடுகள் வந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எதிர்பார்க்காத சாதனை
எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று, யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரத்தில் புது சாதனையை செய்திருக்கிறது. இதுவரைக்கும் முதல் இடத்தில் இருந்து வந்த ரோஜா சீரியலின் டி ஆர் பி யில் 8% மட்டுமே குறைவான நிலையில் இரண்டாவது இடத்தில் இந்த சீரியல் வந்துவிட்டது. எதிர்நீச்சல் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றது, இந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றி தான். கிராமப்புறங்களில் விடவும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications