பிக்பாஸில் ஆரம்பமாச்சு குழாயடி சண்டை... இந்த வாரம் உருளப் போவது யாருடைய தலை
சென்னை: கலகலப்பாக இருந்த பிக்பாஸ் இப்போது களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது.
ஒற்றுமை என்றால் அதற்கு நாங்கள் தான் அடையாளம் என்று சொல்லிக்கொண்டிருந்த போட்டியாளர்களுக்குள் பிரச்சனை பூகம்பமாக வெடித்திருக்கிறது.
இன்றைய மூன்று ப்ரமோக்களும் காயினால் பூதாகரமாக பிரச்சனைகளை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

தாமரையின் உண்மையான முகம்
இதுவரைக்கும் அதிகமாக ப்ரமோக்களில் இடம்பெறாத போட்டியாளர்கள் தான் இன்றைய ப்ரமோக்களில் கண்ணீரை சிந்தி கொண்டு மூன்று ப்ரமோக்களையும் குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர். இது வரைக்கும் இல்லாத வகையில் இன்றைய எபிசோட் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். என்னதான் இதுவரைக்கும் ஜாலியாக இந்த நிகழ்ச்சியிலிருந்து கொண்டிருந்தாலும் எப்போது இவர்கள் தங்களுடைய உண்மை முகத்தை காட்டுவார்கள் என ரசிகர்கள் பலர் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய ப்ரமோவில் தாமரை தன்னுடைய உண்மையான முகத்தை காட்டி விட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

காயின்களின் பெருமை
என்னதான் தாமரைச்செல்விக்கு ரசிகர்கள் அதிகமாக உருவாகி இருந்தாலும் இவர் ஆரம்பத்திலிருந்தே குழந்தை தனமாகவும், வெகுளித் தனமாகவும் இருக்கிறார் மனதில் பட்டதை டக்கென்று பேசகிறார் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில், இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பெருகி வருகின்றனர். முதல் வாரத்தில் இவர் தலைவராக இருந்ததால் அந்த ஒரு வாரம் மட்டும் தான் இவருடைய பெயர் எலிமினேஷனில் இல்லை அதற்கு அடுத்து தொடர்ந்து இவருடைய பெயர் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனில் இருந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இவரை ரசிகர்கள் அதிகளவில் ஓட்டு அளித்து காப்பாற்றி வந்தனர்.

காயினை கைப்பற்றிய சுருதி
இந்த நிலையில் 3-வது வாரத்திலும் இவருடைய பெயர் எலிமினேஷனில் இருந்து வருகிறது. ஆனால் தன்னுடைய காயினை வைத்து தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லது தனக்கு பதிலாக வேறொரு போட்டியாளரை நாமினேஷன் செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று பிக் பாஸ் சலுகை கொடுத்திருந்தது. ஆனால் அதை கூட அவர் பயன்படுத்தாமல் ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்தால் எப்படியும் இந்த வாரம் காப்பாற்றி விடுவார் என்று நினைத்து இருந்தார். இந்த நிலையில் இவருடைய காயினை இன்று சுருதி எடுத்துவிட்டார். இதுதான் வீட்டில் பிரச்சனைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

தீர்வு என்ன??
தாமரைச் செல்வியின் காயின்களை எடுத்தால் எப்படியும் அவர் அழுது கூப்பாடு போட்டு விடுவார் என்று நன்றாகவே தெரியும் என போட்டியாளர்கள் பலர் கூறிக் கொண்டிருந்தது போலவே தற்போது இன்று போட்டியைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். தடித்த வார்த்தைகளால் தன் மனதில் இருப்பதையெல்லாம் முகத்துக்கு நேராக இவர் பேசியது சக போட்டியாளர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தி அழவைத்து இருக்கிறது. அதனால் இன்றைய ப்ரமோகளில் பலரும் வரிசை கட்டிக் கொண்டு அழுது கொண்டு இருக்கின்றனர். இதை பார்த்ததும் இந்த வாரம் கமல் முன்னாடி யாருடைய தலை உருளப் போகிறதோ என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications