போன் நம்பர் கேட்ட ராபர்ட் மாஸ்டருக்கு ரட்சிதா கொடுத்த பதில்... முடிவு இப்பவே தெரிஞ்சிடிச்சோ!?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் இருக்கும் ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நேற்று போன் நம்பர் கேட்டிருக்கிறார். இதை குறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பம் முதலே ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் அதிகமாக உரிமை எடுத்து பழகிக் கொள்வதை பார்த்த நெட்டிசன்கள் காண்டாகி இருக்கும் நிலையில் நேற்று எபிசோட்டில் ராபர்ட் மாஸ்டரின் கேள்விகளுக்கு ரட்சிதா கொடுத்த பதில் சிறப்பாக இருந்தது என்று பலர் பாராட்டி வருகிறார்கள்.

நினைவுக்கு வரும் கேரக்டர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக பலருக்கும் மீனாட்சியாக தெரிந்த ரட்சிதா மகாலட்சுமி முதல் முதலில் ஆரம்பமானது பிரிவோம் சந்திப்பும் சீரியல்தான். அதைத்தொடர்ந்து அவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். திரைப்படங்கள் அவர் எதிர்பார்த்த அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்ற நிலையில் மீண்டும் சீரியலுக்கே வந்து சரவணன் மீனாட்சி சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், ஜீ தமிழில் நாச்சியார்புரம் தற்போது கடைசியாக கலர் தமிழில் இது சொல்ல மறந்த கதை என பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். ஆனால் எத்தனை சீரியல்களில் நடித்திருந்தாலும் ரட்சிதா என்ற பெயரை சொன்னதும் அவருடைய மீனாட்சி கேரக்டர் தான் பலருடைய மனதிற்கும் வந்து போகும். கேரக்டரோடு இவர் பழகிப் போனார்.

வாழ்த்து கூறிய கணவர்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய நிஜமான கேரக்டரை ரசிகர்களின் முன்பு காட்டி ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பல வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ட்ரை பண்ணிக் கொண்டிருந்தாராம். இந்த நிலையில் தற்போதைய ஆறாவது சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரட்சிதாவும் அவருடைய கணவரான சின்னத்திரை நடிகர் தினேஷ் கார்த்திக்கும், ஒரு சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்கிறார் என்ற போது தினேஷ் இவருக்கு வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

பொறுத்துக் கொள்ள முடியவில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தினேஷும் ரட்சிதாவும் சேர்ந்து வாழ்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய குழந்தைக்காக உள்ளே வந்தேன் என்று கூறிக்கொண்டு ரட்சிதாவின் பின்னாடி அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். மூக்குத்தி என்று செல்லமாக அழைத்தபடி ரட்சிதா என்னுடைய ஆள் என்கிற மாதிரியே நடந்து கொள்கிறார் என பலரும் இவர் மீது காண்டாகி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள்ளே ரட்சிதாவிடம் யாரேனும் பேசினால் பொறுத்துக் கொள்ளாத ராபர்ட் மாஸ்டர் செய்யும் செயல்கள் பலருடைய அதிர்ச்சியை பெற்றிருக்கிறது.

செய்த வேலை வெளியே வந்தால் தெரியும்
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் போன் நம்பர் வேண்டும் என்று கேட்க அவர் எப்போதும் போல எதற்கு மாஸ்டர் ஆரம்பத்திலிருந்து இதையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? நாம் இங்கே விளையாட வந்திருக்கோம் அந்த விளையாட்டை கவனத்தை செலுத்துங்கள் என்று சொல்ல தருவியா? தரமாட்டியா? என உரிமையாக ராபர்ட் மாஸ்டர் கோபப்பட, என்னிடம் பேனா நோட்டு புக் இல்லை என்று சொல்ல, ஏன் நேற்று இருந்துல என்று கூற அதை பத்தி இப்போ பேசாதீங்க விட்ருங்க என அந்த பேச்சை முடித்துக் கொள்கிறார்..அது மட்டும் அல்லாமல் ஷிவினுக்கும், மணிகண்டனுக்கும் ரட்சிதா லவ் யூ லாட் ஆஃப் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். இதை குறித்து என்னை நீ ஏமாத்திட்டியா என பீலிங்கோடு ராபர்ட் மாஸ்டர் கேட்க இப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று வழக்கமாக சிரித்தபடியே ரட்சிதா சொல்கிறார். ஆனாலும் இதன் அர்த்தம் புரிந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர் பெண்ணை நம்பாதே என்ற பாடலை பாடிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வழியாக ராபர்ட் மாஸ்டருக்கு இந்த வாரம் வெளியேறி விடுவோம் என்பது தெரிந்து விட்டதோ? முடிவு தெரிந்ததால் தான் ரட்சிதாவிடம் போன் நம்பர் கேட்டு நச்சரித்து கொண்டு இருக்கிறாரோ? வெளியே வந்து பார்த்தால் தெரியும் அவர் செய்து கொண்டிருந்த வேலை எல்லாம் என்று பலரும் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
-
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications