ஒட்டுமொத்த ஊரே பார்க்க..பஸ் ஸ்டாண்டில் கணவன் செய்த செயல்! ஒரே நிமிடத்தில் எல்லாமே முடிஞ்சது! ஷாக் !
நெல்லை: நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை உடனடியாகக் கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாலாமடை பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (26). இவருடைய மனைவி பேச்சியம்மாள் (25). கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு வைத்து இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சுதாகர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த சுதாகர், அங்கிருந்து தப்பி ஓடினார்.
உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்லும் பஸ் நிலையத்தில், மக்கள் கூட்டத்துக்கு இடையே நடந்த இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இது குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் சரவணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கிடையே தப்பி ஓடிய சுதாகர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் கொலையைச் செய்துள்ளார் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
எனினும் அவர் வேறு எதற்காக கொலை செய்தார், இதன் உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சுதாகரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
நெல்லையில் கல்லூரி மாணவி ராமலட்சுமி.. படுக்கை அறையில் இருந்த கோலம்.. ஆடிப்போன பெற்றோர் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?














Click it and Unblock the Notifications