Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | நல்குரவு | அறஞ்சாரா நல்குர வீன்றதா திருக்குறள்

அறஞ்சாரா நல்குர வீன்றதா திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
1047 அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
— மு. வரதராசன்

வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்
— கலைஞர்

நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
— சாலமன் பாப்பையா

அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன், தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட, ஓர் அயலானைப் போலக் கருதிப் பார்க்கப் படுவான்
— புலியூர்க் கேசிகன்

அறமற்ற இல்லாமை அடைந்து விட்டால் ஈன்ற தாய் கூட அந்நியனாக பார்ப்பாள்.
— சிவயோகி சிவகுமார்

அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.).
— பரிமேலழகர்

English Couplet:

From indigence devoid of virtue's grace,
The mother e'en that bare, estranged, will turn her face.

Couplet Explanation:

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

Transliteration (Tamil to English):

aRanjaaraa nalkuravu eendradhaa yaanum
piRanpoala noakkap padum

மொத்தம் 133 அதிகாரங்கள்
1047 of 1330

மேலும் நல்குரவு குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+