சபரிமலையில் பக்தர்களுக்கு மண்டபம் கட்ட தயார்-தமிழகம்
திருவனந்தபுரம்: கேரள அரசு இடம் வழங்கினால், பக்தர்கள் தங்க சபரிமலையில் தமிழக அரசு மண்டபம் கட்டத் தயாராக உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த மாதம் மண்டல பூஜை சீசன் தொடங்கும் நிலையில் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து கொடுப்பது தொடர்பான 6 தென் மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், கோவளம் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது.
தமிழக அரசின் சார்பில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த பெரியகருப்பன் பேசுகையில்,
தமிழக மக்கள் சபரிமலை மற்றும் திருப்பதிக்கும், கேரள மக்கள் பழனி, மதுரைக்கும், ஆந்திர மக்கள் திருத்தணி உள்ளிட்ட திருத்தலங்களுக்கும் பரஸ்பரம் சென்று வருவது, நமது மாநிலங்கள் இடையே மத ரீதியான ஒற்றுமை நிலவுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
சபரிமலையில் அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அடுத்த அபிஷேகத்திற்காக மறுநாள் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த நேரத்தில் உணவு, தங்குமிடம், கழிப்பறை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
கேரள அரசு போதிய நிலம் வழங்கினால், பக்தர்கள் தங்குதற்கு, சபரிமலையில் மண்டபம் கட்ட தமிழகம் தயார். இதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்.
சென்னை, கோவை, பழனி, குமரியில் அபிஷேக டிக்கெட் கவுண்டர் திறக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பம்பை நதியை சுத்தப்படுத்த வேண்டும் என்றார்.
இன்று நடை திறப்பு:
ஒவ்வொரு மலையாள மாதப் பிறப்பை முன்னிட்டும் ஐய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
இந் நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல் சாந்தி விஷ்ணு நம்பூதிரி கோயில் நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தவுள்ளார்.
17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உச்சிகால பூஜை உட்பட சிறப்பு பூஜைகளுடன் உதயாஸ்தமன, படிபூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த 5 நாட்களிலும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
நாளை புதிய மேல்சாந்தி தேர்வு:
சுவாமி ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புரம் அம்மன் கோவில் ஆகியவற்றுக்கு, குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் நாளை (17ம் தேதி) நடைபெறும். நாளை காலை 8 மணிக்கு இந்த தேர்வு நடைபெறும்.
மாத பூஜைகள் நிறைவடைந்து 21ம் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications